"அந்த பெண்ணிற்குள் குடிகொண்டிருக்கும் சாத்தனே என்னை உடலுறவு கொள்ள தூண்டினான்" என பாரிதியாரின் புதிய காரணம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க மேரிலாந்து நகரின் கெய்தஸ்பர்க் பகுதியை சேர்ந்த  பெந்தேகோஸ்தே பிரிவு தேவாலயத்தில் பணியாற்றி வருபவர் 42 வயதுடைய ஆக்டேவியோ காண்டரிரோ (Octavio Cantarero) . இவர் கடந்த ஜனவரி முதல் சுமார் 4 மாத காலமாக ஒரு பெண் சிறுமியை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.


சிறு வயதில் தனியாக இருக்க கூடாது என்று கூறி, அவர் அந்த சிறுமிக்கு தேவாலயத்தின் உள்ளேயே ஒரு சிறிய அறை ஒதுக்கி தந்ததாகவும், தன்னை தனியேவிட மனமில்லை எனக் கூறி அந்த பெண்ணுடன் இருந்த அவர் அவளை மிரட்டி பாலியல் தொல்லைகள் செய்ததாகவும் அந்த பெண் போலீசாரிடம் கூறியுள்ளார். 



போலீசார் விசாரணையில், "அந்த பெண்ணின் உடலில் குடிகொண்டிருக்கும் சாத்தனே என்னை இவ்வாறு செய்யத் தூண்டினான்" எனக் கூறியுள்ளார். இதனிடையே, ஆக்டேவியோ காண்டரிரோவினால் மேலும் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் தங்களை அணுகி புகார் கொடுக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.