அங்காரா: துருக்கிக்கான ரஷ்ய தூதர் அண்ட்ரிவ் கொலோவ் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அங்காராவில் நடைபெற்ற சமகால கலை தொடர்பான கண்காட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அண்ட்ரிவ் நேற்று சென்று இருந்தார். அப்போது நிகழ்ச்சியின் நடுவே திடீரென மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அண்ட்ரிவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 



போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் மர்மநபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீஸ் அடையாள அட்டையுடன் கூட்டத்தில் புகுந்து, மர்மநபர் துப்பாக்கி சூடு நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.