சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ’'சவுதி அரேபியா விஷன் 2030’' என்ற தொலை நோக்குத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். அதன்படி, பெண்களுக்கு அந்நாட்டில் இதுவரை அளிக்கப்படாத பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சவுதியில் சினிமா தியேட்டர் திறக்கவும் பெண்கள் கார் ஓட்டவும் விளையாட்டுகளை மைதானத்துக்குச் சென்று பார்க்கவும் அனுமதியளித்துள்ளார். அதையடுத்து, 2015-ம் ஆண்டு தான் அங்கு பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. தொடர்ந்து முகமது பின் சல்மான் சவூதியின் மன்னராக பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.


பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு, அவர்கள் தனியாக தொழில் தொடங்க, குடும்பத்தினர் அனுமதி இல்லாமல் உயர்கல்வி பயில என அவர்களுக்கான பல உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், சனிக்கிழமை பெண்கள் மட்டுமே பங்கேற்ற முதல் மாரத்தான் போட்டி சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இதில் 1500 பெண்கள் கலந்துகொண்டனர். இந்த பெண்கள் பார்தா அணிந்தபடி, முகம், உடல் முழுவதும் மறைத்தபடி 3 கி.மீ. தொலைவுக்கு ஓடினர்.


சமீபத்தில், பெண்கள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற அனுமதி,  சவுதி பெண்கள் ஆண்களில் அனுமதி இல்லாமலேயே தொழில் தொடங்கலாம், பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து,  கால்பந்து ஆட்டத்தை நேரில் பார்க்க அனுமதி என பல சீர்திருத்த நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகிறது.