துருக்கியில் ராணுவ தளத்திற்குள் நுழைய முயன்ற 35 தீவிரவாதிகள் அந்நாட்டு ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்கள் குர்தீஸ்தான் தொழிலாளர்கள் கட்சி என்ற தீவிரவாத அமைப்பினை சேர்ந்தவர்கள். துருக்கியின் ஹக்காரியில் நேற்று நடந்த மோதலில் பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. 25 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.