சோமாலியா நாடு மொகடிசுவில் கடந்த 14-ம் தேதி 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. மொகாடிசுவில் சபாரி என்ற ஓட்டலில் வெடிகுண்டுகள் நிரப்பிய லாரியை மோதி தீவிரவாதிகள் வெடிக்க செய்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் ஓட்டலின் பெரும் பகுதியும், அதனருகே இருந்த கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாகின. சாலையில் நிறுத்தியிருந்த கார்கள், லாரிகள், வேன்கள் எரிந்து சேதமாகின.


இந்த பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 358 பேர் உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 56 பேரை காணவில்லை. மேலும், 230 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளனர்.