வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இன்றைய இலங்கையில் நிலைக்கு, அதிகாரத்தில் இருந்த ராஜபக்ச குடும்பம் தாம் முக்கிய காரம என மக்கள் கொதித்து எழுந்து போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மாளிகையையும், பிரதமர் இல்லத்தையும் சூரையாடியதைத் தொடர்ந்து,  கோத்தபய ராஜபக்ச சிறிது நாட்கள் தலைமறைவாக இருந்தார்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பரவலான எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று  அதிபர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிரபார்க்கப்பட்ட நிலையில்,  கோட்டாபய ராஜபக்ஷ புதன்கிழமை அதிகாலை நாட்டை விட்டு தப்பிச் சென்றார். மாலத்தீவின் தலைநகரான மாலே நகருக்கு இலங்கை விமானப்படை விமானத்தில் ராஜபக்சே, அவரது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்கள் புறப்பட்டுச் சென்றதாக விமானப்படை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் அங்கிருந்து வேறு ஆசிய நாட்டிற்கு செல்வார் என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டதை அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்காலிக அதிபராக புதன்கிழமை (ஜூலை 13, 2022) நியமிக்கப்பட்டார். கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தை ஆயிரக்கணக்கானோர் சுற்றி வளைத்த நிலையில், ரணில் விக்கிரமசிங்கே இலங்கையில் அவசரகால நிலையை அறிவித்தார். இலங்கை நாடாளுமன்றம்,  ஜூலை 20 அன்று கூடி ரணில் விக்ரமசிங்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | துபாய் தப்பி செல்ல முயன்ற கோத்தபய ராஜபக்ச; தடுத்து நிறுத்திய அதிகாரிகள்


கோத்தபய ராஜபக்ச மாலத்தீவுக்கு விமானம் மூலம் தப்பிச் சென்ற செய்தி பரவியதையடுத்து, கொழும்பில் உள்ள பிரதான ஆர்ப்பாட்டத் தளத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி, "கோத்த திருடன், கோத்த திருடன்" என்று கோஷமிட்டனர்.


கடந்த வெள்ளிக்கிழமை முதல் பொது வெளியில் காணப்படாத கோத்தபய ராஜபக்ச, ஐக்கிய அரசாங்கத்திற்கு வழி வகுக்கும் வகையில் புதன்கிழமை ஜனாதிபதி பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அவரது மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லங்களை முற்றுகையிட்டதை அடுத்து, ராஜினாமா செய்யும் முடிவை எடுத்தார்.


முன்னதாக, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள், கடந்த மே மாதத்தில் கொழுந்துவிட்டு எரிந்தன. குடும்பத்திற்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக மாறி, கோத்தபய ராஜபக்சவின் மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததையடுத்து, அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் கொழும்பு திரும்புவதற்கு முன்னர் சில நாட்கள் நாட்டின் கிழக்கில் உள்ள இராணுவ முகாமில் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | எனக்கு இருந்தது ஒரே வீடு தான்... கண் கலங்கிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR