காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள இராணுவ அகாடமியை குறிவைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் மற்றும் நான்கு ராணுவ வீரர்கள் உட்பட குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காபூலில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை, ஆனால் இஸ்லாமிய (Islamic State) குழுவில் இருந்து தலிபான் மற்றும் போராளிகள் இருவரும் ஆப்கானிய படைகளை குறிவைத்து நகரத்தில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்துகின்றனர்.


இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 6 பேருடன், ஐந்து பொதுமக்கள் உட்பட 12 பேர் காயமடைந்ததாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நஸ்ரத் ரஹிமி தெரிவித்தார்.


மேற்கு காபூல் சுற்றுப்புறத்தின் புறநகரில் அமைந்துள்ள மார்ஷல் பாஹிம் மிலிட்டரி அகாடமியின் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள ஒரு போலீஸ் சோதனைச் சாவடியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது என்று அவர் கூறினார். உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை குறித்த படங்களைக் காட்டியது.


இந்த அகாடமியை குறிவைத்து கடந்த காலங்களில் தாக்கப்பட்டது. கடந்த மே மாதம், ஒரு தற்கொலை படை தாக்குதலில் அங்கு 6 பேரைக் கொன்றார் குறிப்பிடத்தக்கது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.