ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கும் மாளிகை அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு தாலிபன்கள் பொறுப்பேற்றுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெளிநாட்டு சுற்றுலா மாளிகை வளாகத்திற்குள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட டிரக்குகளுடன் சென்று தாலிபன்கள் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.


டிரக்கில் சென்ற இரண்டு தற்கொலைப்படை பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. நடத்தப்பட்ட தாக்குதலில் யாரும் உயிரி ழந்ததாக இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் அப்பகுதியில் தொடர்ந்து தாலிபன்களுக்கும் ஆப்கன் ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்து வருகிறது.