புதுடில்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால், இப்போது மக்களின் வாழ்வாதாரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில், நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை வேலையிலிருந்து வெளியேற்றுகின்றன. நோய்த்தொற்றைத் தடுக்க உலகின் பல்வேறு நாடுகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மக்கள் தங்கள் வேலைகலை  இழந்து வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு காரணமாக அமெரிக்காவில் மட்டும் 1.68 கோடி மக்கள் வேலையில்லாமல் போயுள்ளனர் என்பதை ஒரு வெளிநாட்டு வலைத்தளம் கூறுகிறது.


அமெரிக்காவில் வேலையின்மை எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


அமெரிக்க தொழிலாளர் பணியகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இதுவரை 1.68 கோடி மக்கள் வேலையின்மை காரணமாக அரசாங்கத்திடம் வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இது வெறும் 3 வார எண்ணிக்கை மட்டுமே.


கடந்த இரண்டு வாரங்களில், அமெரிக்காவில் உதவிக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 1 கோடி என்று உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். இருப்பினும், மூன்றாவது வாரத்தில் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 2 லட்சம் 61 ஆயிரமாக குறைந்துள்ளது. இது இரண்டாவது வாரத்தில் 66 லட்சமாக இருந்தது.


கனடா மற்றும் ஜெர்மனியிலும் வேலையின்மை அதிகரித்துள்ளது:


கொரோனா தொற்று காரணமாக, கனடாவில் சுமார் 1 மில்லியன் மக்கள் வேலை இழந்துவிட்டார்கள் என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன். கனடா தொழிலாளர் படை கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மார்ச் மாதத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வேலை இழந்துள்ளனர். இதன் மூலம், கனடாவில் வேலையின்மை விகிதம் மார்ச் மாதத்தில் 2.2 சதவீதத்திலிருந்து 7.8 சதவீதமாக பல மடங்கு அதிகரித்துள்ளது.


ஜெர்மனி கொரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்ளும் நிலையில், இந்த ஆண்டு வேலையின்மை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்க புள்ளி விவரங்களின்படி, இதுவரை 6.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் வேலை நேரத்தைக் குறைக்க விண்ணப்பித்துள்ளனர். செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பி படி, இந்த நிலைமை 2008-09 மந்தநிலையை விட பயங்கரமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.


இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படும்:


இந்தியாவில் ஒழுங்கமைக்கப்படாத துறையில் பணிபுரியும் சுமார் 400 மில்லியன் மக்கள், அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் மற்றும் அதைச் சமாளிக்க 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவர்களின் வேலைகள் மற்றும் வருவாயைப் பாதிக்கலாம். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் 400 மில்லியன் மக்களை மேலும் வறுமையில் தள்ளும்  எனக் கூறியுள்ளது.