புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் ஈரான் மோதலை அடுத்து, சர்ச்சைக்குரிய வான்வெளியை தவிர்க்க இந்திய விமானச்சேவை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, ஈரான் படையை கருப்பு பட்டியலில் சேர்த்தது. அந்நாட்டுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. ஈராக் நாட்டுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்கா, ஈராக் மீது போர் தொடுக்க போவதாக மிரட்டி வருகிறது. 


சமீபத்தில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு காரணம் ஈரான்தான் எனக்கூறி மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு கூடுதலாக ஆயிரம் ராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைத்தது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ஈரான், அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் விரைவில் தொடங்கும் என பகிரங்கமாக அறிவித்துள்ளது. 


இதனையடுத்து எங்கள் நாட்டின் ஹோர்மஸ்கான் வான்பரப்பில் அனுமதியின்றி நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்தது. 


இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் மீது போர் தொடுக்க உத்தரவிட்டார். பின்னர் கடைசி நிமிடத்தில் போர் உத்தரவை திரும்ப பெற்றார். 


இதனையடுத்து எங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் கூட அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளார். இதனால் மத்திய ஆசிய கிழக்கு பகுதியிலும், வளைகுடா பகுதியிலும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.


இந்தநிலையில், இந்திய விமானச்சேவை நிறுவனங்கள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்பொழுது பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் ஈரானின் ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளை தவிர்த்து விட்டு, மாற்று பாதையில் விமானச்சேவை மேற்கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.