கனடா டொரன்டோ நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி; 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கனடாவின் டொரண்டோ நகரில் அமைந்துள்ள கிரீக்டவுன் பகுதி எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படும் பகுதிகளில் ஒன்று. இந்நிலையில், நேற்று இரவு அப்பகுதியில் பொதுமக்கள் மீது ஒரு மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் அங்கும் இங்குமாக அலைமோதியுள்ளனர். 


இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் பலியாகியுள்ளார். இச்சம்பவத்தால் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். 



இதையடுத்து, துப்பாக்கிசூடு நடத்தியவர்மீது காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் அந்த மர்ம நபர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது!