அ.தி.மு.க-வின் உண்ணாவிரதம் போலியானது -கமல்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை, ஆளுங்கட்சியின் போலியான உண்ணாவிரத போராட்டங்களால் எவ்வித நன்மையும் நடக்கப் போவதில்லை -கமல்! 

Last Updated : Apr 4, 2018, 12:08 PM IST
அ.தி.மு.க-வின் உண்ணாவிரதம் போலியானது -கமல்!  title=

திருச்சியில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் பொதுக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று சென்னையில் இருந்து ரயிலில் திருச்சிக்கு வந்தார் கமல்ஹாசன். ரயில் நின்று செல்லும் எல்லா ரயில் நிலையங்களிலும் தொண்டர்களை சந்தித்தார் கமல்.

இதை தொடர்ந்து பத்திக்கை நிருபர்களுக்கு பேட்டியளித்த நடிகர் கமல்: "எதிர்பதற்கான சூழல் ஏற்பட்டால் செய்யவேண்டியது தான். கொள்கை ரீதியாகவும், செயல் முறைகளை பார்த்தும் நான் எடுத்த முடிவு. அது வரும்போது பார்க்கலாம். கெட்டது தான் நடக்கும் என்று ஏன் யூகிக்க வேண்டும்? அப்படி ஏற்படாமல் இருந்தால் நல்லது. ஏற்பட்டால் நின்று செயல்படாமல் இருந்துவிட முடியுமா" என்று எதிர் கேள்வி எழுப்பினார்.

ரஜினியின் பூர்வீகம் பற்றி ஒருவர் கேட்ட போது, "ஒருவர் எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்று பார்க்கக் கூடாது. அவர் இந்த சமூகத்துக்கு என்ன மாதிரியான கருத்துக்களை அளிக்கிறார் என்று தான் பார்க்க வேண்டும்" எனவும் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து, திருச்சி பொது கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்...! 

அதிமுகவின் போலியான உண்ணாவிரதத்தால் எதுவும் நடக்கப்போவதில்லை. இன்றைய பொதுக்கூட்டம் பிரச்னைகள் பற்றி மட்டும் பேசாது. தீர்வுக்கான வழிகளையும் முன்நிறுத்தும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை, ஆளுங்கட்சியின் போலியான உண்ணாவிரத போராட்டங்களால் எவ்வித நன்மையும் நடக்கப் போவதில்லை. 

மத்திய அரசின் எடுபிடி போல் மாநில அரசு நடந்து கொள்கிறது. இன்று நடக்கும் எங்கள் பொதுக்கூட்டம் காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்கும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

Trending News