7th Pay Commission: அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அந்த நாள்! வந்தது நல்ல செய்தி!

7th Pay Commission: தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) உயர்வை மத்திய அரசு இந்த வாரம் அறிவிக்க வாய்ப்புள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Mar 22, 2023, 06:21 AM IST
  • ஹோலி பண்டிகையையொட்டி டிஏ உயர்வு கிடைக்கும் என்று கூறப்பட்டது.
  • மார்ச் 22ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் டிஏ உயர்வு அறிவிக்கப்படலாம்.
  • தற்போது 4% டிஏ உயர்த்தப்பட்டால் ஊழியர்களின் மொத்த டிஏ 42% ஆக இருக்கும்.
7th Pay Commission: அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அந்த நாள்! வந்தது நல்ல செய்தி! title=

7th Pay Commission: கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் கடந்த சில மாதங்களாகவே சம்பள உயர்வுக்காக காத்திருக்கின்றனர்.  ஊழியர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் ஊடகங்களில் அடிக்கடி செய்திகளும் வெளியாகிக்கொண்டே வருகிறது.  முன்னதாக ஹோலி பண்டிகையையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு (டிஏ) கிடைக்கும் என்று கூறப்பட்டது.  ஆனால் மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு பற்றிய எந்த செய்தியையும் அறிவிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது.  தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) உயர்வை மத்திய அரசு மார்ச் 22க்கு பிறகு அறிவிக்க வாய்ப்புள்ளது.  

மார்ச் 22-ம் தேதியன்று சைத்ரா நவராத்திரி பண்டிகை தொடங்குகிறது, அதோடு அன்றைய தினம் நடைபெறும் முக்கியமான மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளிவர வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது   மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.  தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது, இப்போது 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 42% ஆக இருக்கும்.

மேலும் படிக்க | வீட்டு கடன் வட்டி குறைத்தது பாங்க் ஆஃப் பரோடா - மார்ச் 31 கடைசி தேதி..!

கடந்த ஆண்டு செப்டம்பர் 28ம் தேதியன்று மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்தது, அதன்பின்னர் அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வந்தது.  பொதுவாக ஒரு வருடத்தில் இரண்டு முறை வீதம் ஜனவரியில் ஒரு முறையும், ஜூலையில் இரண்டாவது முறையும் மத்திய அரசு அகவிலைப்படியில் திருத்தம் மேற்கொள்கிறது.  4% டிஏ உயர்வுக்குப் பிறகு ஊழியர்களின் மொத்த டிஏ 42% ஆக இருக்கும், அப்போது ரூ.18,000 அடிப்படைச் சம்பளத்தின் மீதான மொத்த ஆண்டு அகவிலைப்படி ரூ.90,720 (ஆண்டுதோறும்) ஆக இருக்கும் மற்றும் ஒவ்வொரு மாதமும் ரூ.720 அதிகரிக்கும்.  தற்போது, ​​38% வீதத்தில், ஊழியர்களுக்கு மாதந்தோறும் ரூ.6,840 அகவிலைப்படி வழங்கப்படுகிறது, இந்த புதிய டிஏ உயர்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கு மாதம் ரூ.7,560 கிடைக்கும். 

கணக்கீடு:

ஊழியரின் அடிப்படை சம்பளம் மாதம் ரூ.18,000 என்றால்

18000 x 42 / 100 = 7560

புதிய அகவிலைப்படி (42%) ரூ 7560/மாதம்

புதிய அகவிலைப்படி (42%) ரூ 90,720/ஆண்டு

இதுவரை அகவிலைப்படி (38%) ரூ.6840/மாதம்

எவ்வளவு அகவிலைப்படி அதிகரித்தது 7560- 6840 = மாதம் ரூ 720

ஆண்டு ஊதிய உயர்வு 720X12 = ரூ.8,640

மேலும் படிக்க | தங்கம் வாங்க போறீங்களா? ஏப்ரல் 1 முதல் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News