7th Pay Commission: ஜாக்பார்ட் செய்தி! அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு!

7th Pay Commission: அரசாங்கம் எடுக்கப்போகும் புதிய முடிவின்படி ஊழியர்களின் சம்பளம் ரூ.95,000 வரை உயரக்கூடும் என்று ஊடகங்களில் வெளியான தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. 

Written by - RK Spark | Last Updated : May 2, 2023, 01:07 PM IST
  • தற்போது மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது.
  • ஃபிட்மென்ட் பேக்டர் உயர்த்தப்பட்டால் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.26,000 ஆக உயரும்.
  • ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 சதவீதத்திலிருந்து 3.68 சதவீதமாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
7th Pay Commission: ஜாக்பார்ட் செய்தி! அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு! title=

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது மிகப்பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது, அதாவது மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கான சம்பளத்தை இரண்டு சாத்தியமான உயர்வுகளுடன் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  அரசாங்கத்தின் இந்த முடிவின்படி ஊழியர்களின் சம்பளம் ரூ.95,000 வரை உயரக்கூடும் என்று ஊடகங்களில் வெளியான தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.  இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நரேந்திர மோடி அரசாங்கம், ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (டிஏ) 4 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம் என்றும், இதனால் ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயரும் என்றும் கூறப்படுகிறது.  தற்போதைய நிலவரப்படி, ​​மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், ரூ.18,000 ஆக உள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் பேக்டரில் திருத்தம் செய்யப்பட்ட பின், ஊழியர்களின் அடிப்படை சம்பளம், மாதம் ரூ. 21 ஆயிரத்தில் இருந்து, ரூ.26 ஆயிரமாக உயரும் என்று கூறப்படுகிறது.  எதிர்பார்த்தபடி ஃபிட்மென்ட் பேக்டர் உயர்த்தப்பட்டால், அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் ரூ.8,000 வரை கூடுதல் பலன் கிடைக்கப்பெறும், அரசாங்கம் ஃபிட்மென்ட் பேக்டரை 3.68 மடங்கு வரை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | SBI குயிக் மிஸ்டு கால் வங்கி சேவை பயன்படுத்துவது எப்படி? இதோ வழிமுறை

தற்போது மத்திய ஊழியர்களுக்கு 2.57 சதவீதம் என்ற விகிதத்தில் ஃபிட்மென்ட் பேக்டரை கணக்கிட்டு அரசாங்கம் சம்பளம் வழங்கி வருகின்றது, ஆனால் அரசு ஊழியர்கள் 2.57 சதவீதமாக உள்ள ஃபிட்மென்ட் பேக்டரை 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர்.  மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையின்படி, அரசு ஃபிட்மென்ட் பேக்டரை 3 மடங்காக உயர்த்தினால், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மாதம் ரூ.35 ஆயிரம் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.  கடந்த 2016-ம் ஆண்டு ஏழாவது ஊதியக் குழு அமலுக்கு வந்தபோது ஃபிட்மென்ட் பேக்டர் அதிகரிக்கப்பட்டது.  ஃபிட்மென்ட் பேக்டரை அரசு உயர்த்துவதற்கு முன்னர் அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.6,000 ஆக இருந்தது.  அதன் பின்னர் ஊழியர்களின் சம்பளம் ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது, இந்நிலையில் அரசு ஊழியர்கள் தற்போது ​​மீண்டும் ஃபிட்மென்ட் பேக்டரை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.  என்னதான் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயரப்போவதாக கூறப்பட்டாலும், மத்திய அரசு இன்னும் தனது ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்பினையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து மத்திய அரசு விரைவில் நல்ல முடிவை எடுக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.  வெளியான தகவல்களின்படி அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தினால் அது ஊழியர்களுக்கு பெரியளவில் மகிழ்ச்சியினை கொடுக்கும்.  ஃபிட்மென்ட் பேக்டர் அதிகரிப்புக்கான கோரிக்கை ஒருபுறம் இருந்து வந்தாலும் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வையும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.  மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும் (டிஏ), அரசு ஓய்வூதியதரர்களுக்கான அகவிலை நிவாரணமும் (டிஆர்) 4 சதவீதம் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.  வெளியான தகவல்களின்படி அரசு அகவிலைப்படியையும் (டிஏ), அகவிலை நிவாரணத்தையும் (டிஆர்) 4 சதவீதம் உயர்த்தினால் அவர்களின் மொத்த அகவிலைப்படி (டிஏ) 45 சதவீதமாக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | Sukanya Samriddhi Yojana: ஜாக்பாட் லாபம் அளிக்கும் சூப்பர் திட்டம், முழு கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News