Home Loan: அதிகரிக்கின்றன வட்டி விகிதங்கள், கடம் பெறும் முன் இவற்றில் கவனம் தேவை

Home Loan Interest Rate: வங்கிகளின் வீட்டுக் கடன் பாக்கியில் இரட்டை இலக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தக் கணக்கீட்டு காலத்திற்குப் பிறகு, செப்டம்பரில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 10, 2022, 01:29 PM IST
  • குடியிருப்பு கடன்கள் நீண்ட காலத்திற்கு நீடிக்கும்.
  • மேலும் இந்த காலகட்டத்தில் வட்டி விகிதங்கள் மாறுபடும்.
  • இது வாடிக்கையாளர்களுக்கும் தெரியும்.
Home Loan: அதிகரிக்கின்றன வட்டி விகிதங்கள், கடம் பெறும் முன் இவற்றில் கவனம் தேவை title=

வீட்டுக் கடன் வட்டி விகிதம்: கடந்த ஐந்து ஆண்டுகளில் வங்கிகளின் வீட்டுக் கடன் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து ரூ.16.85 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதால், கடன் வாங்கிய தொகையில் தங்களுடைய கனவு வீட்டை வாங்குபவர்களுக்கு வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தரவுகள் மூலம் இது தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் வட்டி விகிதத்தை 1.40 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது.

வீட்டுக் கடன் பாக்கிகள் அதிகரிப்பு

இந்தக் காலகட்டத்தில் வங்கிகளின் வீட்டுக் கடன் பாக்கியில் இரட்டை இலக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தக் கணக்கீட்டு காலத்திற்குப் பிறகு, செப்டம்பரில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, 2016-17ஆம் ஆண்டின் இறுதியில் வங்கிகளின் வீட்டுக்கடன் நிலுவையில் ரூ.8,60,086 கோடியாக இருந்தது. இது 2021-22ஆம் நிதியாண்டில் ரூ.16,84,424 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் துறை வல்லுநர்கள் வட்டி விகிதங்கள் முக்கியம் என்றாலும், அவை வீடு வாங்குபவரின் நிர்ணயத்தை பாதிக்காது என்று கூறுகிறார்கள்.

வட்டி விகிதங்களில் ஏற்ற இறக்கங்கள் 

இதற்குக் காரணம், ஒருவர் தனது தற்போதைய வருமானம் மற்றும் எதிர்கால வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு வீடு வாங்கும் முடிவை எடுப்பதுதான். இது தவிர, 15 வருட கடன் காலத்தில் வட்டி விகிதங்கள் பொதுவாக ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதையும் மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | வீட்டுக்கடன் எளிதில் பெற இந்த முறையை பாலோ பண்ணுங்க 

பாங்க் ஆஃப் பரோடாவின் பொது மேலாளர் (அடமானம் மற்றும் பிற சில்லறை சொத்துக்கள்) ஹெச்.டி. சோலங்கி, "குடியிருப்பு கடன்கள் நீண்ட காலத்திற்கு நீடிக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் வட்டி விகிதங்கள் மாறுபடும் என்பது வாடிக்கையாளர்களுக்கு தெரியும். நாட்டின் சராசரி வருமானம் எட்டு முதல் 12 சதவீதம் வரை அதிகரித்தாலும் கூட, வட்டி விகிதங்கள் அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்பு ஓரளவுக்கு குறைகிறது.” என்று கூறியுள்ளார்.

ஆண்டு அடிப்படையில் இவ்வளவு அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் வங்கிகளின் வீட்டுக் கடன் நிலுவைத் தொகை ஆண்டுக்கு மாத அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 13.7 முதல் 16.4 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆகஸ்ட் 2022 இறுதியில் ரூ.17.85 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வீடமைப்பு நிதி நிறுவனமான ஹெச்டிஎஃப்சியின் நிர்வாக இயக்குநர் ரேணு சூத் கர்னாட், வட்டி விகித உயர்வு வீட்டுக் கடன் தேவையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நம்பப்படுவதாக கூறினார். 

இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்: 

- வட்டி விகிதத்தை செக் செய்து கொள்ளவும்.
- கடன் தொகையை சரிபார்க்கவும்.
- கடன் காலத்தை கணக்கிடுங்கள்.
- முன்பணம் செலுத்துவது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
- செயலாக்க கட்டணத்தை மனதில் கொள்ளுங்கள்.
- முன்பணம் செலுத்தும் கட்டணங்களையும் கண்டறியவும்.
- முன் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக் கடனின் பலன்களைப் பார்க்கவும்.
- தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருங்கள்.

மேலும் படிக்க | LIC Housing Finance: வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை அதிகரிக்கிறது LIC 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News