முதலீட்டாளர்களுக்கு முக்கிய செய்தி... விதிகளில் மாற்றம் செய்த மத்திய அரசு!

Small Savings Scheme Rules: பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களின் விதிகளில் முக்கிய மாற்றத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதுகுறித்த தகவலை இங்கு தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 23, 2023, 07:46 PM IST
  • சிறுசேமிப்புத் திட்டங்களின் KYC பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதுகுறித்த அறிவிப்பை சில நாள்களுக்கு முன் நிதியமைச்சகம் வெளியிட்டது.
  • இந்த திட்டங்களில் இனி ஆதார், பான் கார்டு கட்டாயமக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு முக்கிய செய்தி... விதிகளில் மாற்றம் செய்த மத்திய அரசு! title=

Small Savings Scheme Rules: பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) போன்ற ஏதேனும் அரசாங்கத் திட்டங்களில் நீங்கள் பணத்தை முதலீடு செய்திருந்தால், இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கான விதிமுறைகளை அரசு மாற்றியுள்ளது. இப்போது நீங்கள் இந்த அரசாங்க திட்டங்களில் ஏதேனும் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், பான் மற்றும் ஆதார் அட்டை இல்லாமல் நீங்கள் அதைப் பயன்படுத்த முடியாது.

நிதி அமைச்சகம் அறிவிப்பு 

இதுகுறித்த தகவலை, நிதியமைச்சகம் சில நாட்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றின் வாயிலாக வெளியிட்டு தெரிவித்தது. சிறுசேமிப்புத் திட்டங்களின் KYC பயன்படுத்தப்படும் என்று இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இது தவிர, முதலீட்டாளர்கள் மேற்கொண்டு முதலீடு செய்ய ஆதார் பதிவு எண்ணை முதலில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இது தவிர, வரம்பிற்கு மேல் முதலீடு செய்ய பான் கார்டு காட்டப்பட வேண்டும். பான் கார்டு இல்லாமல் முதலீடு செய்ய முடியாது. 

மேலும் படிக்க | 7th Pay Commission: முதலில் DA, பின் HRA... இரண்டிலும் அதிகரிப்பு, ஊதியத்தில் ஏற்றம்

6 மாதங்கள் அவகாசம்

அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கும் போது உங்களிடம் ஆதார் இல்லை என்றால், ஆதாருக்கான பதிவு சீட்டை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், 'சிறு சேமிப்பு திட்ட' முதலீட்டுடன் முதலீட்டாளரை இணைக்க, கணக்கு துவங்கிய ஆறு மாதங்களுக்குள் ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும்.

இனிமேல், சிறு சேமிப்புத் திட்டத்தில் கணக்கு தொடங்க என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பதை இங்கு காணலாம். 

- உங்களிடம் ஆதார் எண் அல்லது ஆதார் பதிவுச் சீட்டு இருக்க வேண்டும்.

- இது தவிர, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இருக்க வேண்டும்.

- பான் எண், ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை 2023, செப்.30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவில்லை என்றால், அவர்களின் கணக்கு அக்டோபர் 1, 2023 முதல் தடைசெய்யப்படும்.

மேலும் படிக்க | அம்ரித கலசம் திட்டத்தை மீண்டும் நீட்டித்துள்ள SBI... இந்த முறை மிஸ் பண்ணாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News