2022-23க்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.15% அமலுக்கு வந்தது

EPF Interest Rates: வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்த இன்று அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியானது. 2022-23 ஆம் ஆண்டிற்கான EPF வட்டி 8.15 சதவீதமாக உறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 24, 2023, 02:46 PM IST
  • EPF வட்டி விகிதம் 8.15% என்பது நடைமுறைக்கு வந்தது
  • ஏப்ரல் 2022 -மார்ச் 2023 க்கு இடையில் செய்யப்பட்ட EPF வைப்புகளுக்கு இது பொருந்தும்
  • வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அறிவுறுத்தல்
2022-23க்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.15% அமலுக்கு வந்தது title=

புதுடெல்லி: திங்களன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, 2022-23 ஆம் ஆண்டிற்கான EPF மீதான வட்டியை 8.15 சதவீதமாக உறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட அலுவலகங்களை EPFO கேட்டுக் கொண்டுள்ளது. மார்ச் 2022 இல், EPF டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 8.10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது, தற்போது, 2022-23 நிதியாண்டிற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் வைப்புத்தொகைக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

மார்ச் 28, 2023 அன்று ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO, தனது ஆறு கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கு 2022-23 ஆம் ஆண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை 8.15 சதவீதமாக உயர்த்தியது.

திங்களன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, 2022-23 ஆம் ஆண்டிற்கான EPF மீதான 8.15 சதவீத வட்டியை உறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட அலுவலகங்களை EPFO கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் EPFO அறங்காவலர்களால் அங்கீகரிக்கப்பட்ட EPF வட்டி விகிதத்திற்கு நிதி அமைச்சகம் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, இப்போது EPFO கள அலுவலகங்கள் வட்டியை சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கும் செயல்முறையைத் தொடங்கும்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பழைய ஓய்வூதியத்திற்கு மாற்றி கொள்ளலாம்!

EPF என்பது பணியாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர சட்டம், 1952 இன் கீழ் ஒரு ஓய்வூதிய பலன்கள் திட்டமாகும், இதில் ஊழியர் மாத அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட பங்களிப்பை செலுத்த வேண்டும், அதேபோல முதலாளியும் சமமான பங்களிப்பை செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தை, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு EPFO  நிர்வகிக்கிறது. 

ஓய்வு மற்றும் சேவைக் காலத்தின் போது என இரண்டிற்கும் வட்டியுடன் சேர்த்து பி.எஃப் மொத்தத் தொகையை பணியாளர் பெறுகிறார். அசல் தொகை மற்றும் சேர்ந்த வட்டி ஆகியவை திரும்பப் பெறும்போது வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது, இதனால் சம்பளம் பெறும் வகுப்பினருக்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம் என்பது கவர்ச்சிகரமான ஓய்வூதியத் திட்டம் ஆகும்.

இந்தத் திட்டம் 20 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களுக்கும் செல்லுபடியாகும் திட்டம் ஆகும்.  

மார்ச் 2022 இல், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2021-22க்கான EPF டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 2020-21 இல் 8.5 சதவீதத்திலிருந்து 8.10 சதவீதமாக குறைத்தது. 

1977-78ல் EPF வட்டி விகிதம் 8 சதவீதமாக இருந்தது, அதற்குப் பிறகு நான்கு தசாப்தங்களின் மிகக் குறைவான அளவான அளவாக 8.10 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 2022-23 ஆம் ஆண்டிற்கான EPF மீதான 8.15 சதவீத வட்டி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது பணியாளர்களுக்கு சற்று ஆசுவாசத்தை அளிக்கும்.

EPF வட்டி விகிதம் பற்றி நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள்:

1. தற்போது8.15% வட்டி விகிதம் நடைமுறைக்கு வந்துள்ளது மற்றும் ஏப்ரல் 2022 மற்றும் மார்ச் 2023 க்கு இடையில் செய்யப்பட்ட EPF வைப்புகளுக்கு இது பொருந்தும்.

2. வட்டி மாதந்தோறும் கணக்கிடப்பட்டாலும், அது பொருந்தக்கூடிய நிதியாண்டின் மார்ச் 31 அன்று ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

மேலும் படிக்க | உங்கள் PF கணக்கில் இருந்து கடன் வாங்கலாம்! எப்படி தெரியுமா?

3. மாற்றப்பட்ட வட்டி விகிதத்தின்படி, வட்டித் தொகையானது அடுத்த மாத நிலுவையுடன், அதாவது ஏப்ரல் மாத நிலுவையுடன் சேர்க்கப்பட்டு, கூட்டு வட்டி கணக்கிடப்படும். 

4. தொடர்ச்சியாக 36 மாதங்களுக்கு EPF கணக்கில் பங்களிப்புகள் எதுவும் செய்யப்படவில்லை என்றால், அந்தக் கணக்கு செயலற்றதாகவோ அல்லது செயல்படாததாகவோ மாறும்.

5. ஓய்வுபெறும் வயதை எட்டாத ஊழியர்கள் தங்கள் செயலற்ற கணக்குகளுக்கு வட்டி பெறலாம்.

6. ஓய்வுபெற்ற ஊழியர்களின் செயலற்ற கணக்குகளில் போடப்பட்ட நிதிக்கு வட்டி செலுத்தப்படுவதில்லை.

7. செயலற்ற கணக்குகளில் வசூலிக்கப்படும் வட்டிக்கு உறுப்பினரின் வருமான வரி ஸ்லாப் விகிதத்தில் வரி விதிக்கப்படுகிறது.

8. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு நிறுவனம் செலுத்தும் கட்டணங்களுக்கு ஊழியருக்கு வட்டி கிடைக்காது. ஆனால், 58 வயதுக்கு மேல் இந்தத் தொகையில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | தனியார் ஊழியர்கள் கவனத்திற்கு... EPFO மூலம் ரூ. 7 லட்சம் வரை காப்பீடு - முழு விவரம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News