இந்தியாவில் பாஜக... தமிழகத்தில் திமுக; இறுதி முடிவு என்ன?

நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைப்பெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது. தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக முன்னிலை பெற்று இருந்தாலும், தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.

Last Updated : May 23, 2019, 09:27 AM IST
இந்தியாவில் பாஜக... தமிழகத்தில் திமுக; இறுதி முடிவு என்ன? title=

நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைப்பெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது. தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக முன்னிலை பெற்று இருந்தாலும், தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.

நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. 

மக்களவைத் தேர்தலை பாரதிய ஜனதா பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கூட்டணியும்  சந்தித்தன. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று  காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை நடந்தது. அதைத் தொடர்ந்து  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள்  எண்ணும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

வழக்கமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் அன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகி விடும். இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாக்கு  ஒப்புகைச்சீட்டுகளும் எண்ணப்படுவதால் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாவதில் சுமார் 5 மணி நேரம் வரை கால தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.

முதல் கட்டமாக பாரதீய ஜனதா 115 தொகுதிகளிலும், காங்கிரஸ் 40  தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. மெகா கூட்டணி 5 தொகுதிகளிலும், மற்ரவர்கள் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியும், மதுராவில் ஹேமமாலினியும் முன்னிலை பெற்றுள்ளனர் வகிக்கின்றனர்.

இந்திய அளிவில் பாஜக-வின் கை ஓங்கி இருந்தாலும் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் எந்நேரத்திலும் மாறலாம், முழுமையாக முடிவுகள் வெளியாகும் வரை காத்திருப்போம்.

Trending News