காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியே தொடருவார் என தகவல்...

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடருவார் எனவும், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டுவது தொடர்பான அறிவிப்பு உன்மையில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : May 28, 2019, 01:21 PM IST
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியே தொடருவார் என தகவல்... title=

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடருவார் எனவும், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டுவது தொடர்பான அறிவிப்பு உன்மையில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராகுல் காந்தி வீட்டில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி வாரோதா, அஹமது பட்டேல் ஆகியோர் நடத்திய திடீர் சந்திப்பிற்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக காங்கிரஸ் தலைவர் பதவி மாற்றம் குறித்து பரிசீலினை மேற்கொள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி அடுத்த 4 -5 நாட்களில் மீண்டும் கூடவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை தற்போது காங்கிரஸ் கட்சியினர் மறுத்துள்ளனர்.

நடந்து முடிந்த 17-ஆம் மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. வரும் 30 ஆம் தேதி மோடி அமைச்சரவை பதவியேற்க உள்ளது. அதே வேளையில் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சிக்கான அந்தஸ்து கூட இல்லாமல் பெரும் தோல்வியை கண்டுள்ளது. குறிப்பாக உத்திர பிரதேச மாநிலம் அமோதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிரித்தி இராணியிடன் தோல்வி கண்டார்.

தமிழ்நாடு, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை தவிர காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்கள், உத்திர பிரதேசம், ஒடிசா, வடகிழக்கு மாநிலங்கள் என பல மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. இது காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

இந்த சூழ்நிலையில், கடந்த சனிக்கிழமை (மே 25) அன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகுவதாகவும், அதற்க்கான கடிதத்தை கட்சியின் மேலிடத்தில் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. 

ஆனால் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி ராஜினாமா கடிதத்தை அளித்ததாக ஊடங்களிலும், பத்திரிக்கைகளிலும் வெளியான தகவல் உண்மை இல்லை என காங்கிரஸின் தகவல் தொடர்பு அலுவலர் ரந்தீப் சிங் சுர்ஜேவலா விளக்கம் அளித்தார். 

தற்போது நமக்கு கிடைத்த தகவலின் படி, காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதில் ராகுல் காந்தி தெளிவாக உள்ளதாகவும், அதில் இருந்து பின்வாங்க மாட்டேன். யாரும் எனது ராஜினாமாவை திரும்பப் பெற வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க வேண்டாம் என ராகுல் கூறியதாக காங்கிரஸ் கட்சியின் சில முக்கிய தலைவர்கள தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில் தற்போது ராகுல் காந்தியின் முடிவு குறித்து பரிசீலனை செய்ய காங்கிரஸ் காரிய கமிட்டி அடுத்த 4 - 5 நாட்களில் கூடும் என தகவல்கள் வெளியானது. தற்போது இந்த தகவலை காங்கிரஸ் வட்டாரங்கள் மறுத்துள்ளனர்.

Trending News