இயற்கை உணவில் கருப்பு வெல்லம் எப்படி தயாரிக்கப்படுகிறது

Last Updated : Aug 22, 2017, 07:53 PM IST
இயற்கை உணவில் கருப்பு வெல்லம் எப்படி தயாரிக்கப்படுகிறது  title=

கருப்பட்டி என்பது பனை மரத்தின் சாரில் இருந்து தயாரிக்கப்படுவது. பனை மரத்தின் சாரை அதாவது (பத்தநீர் என்பர்) நன்கு காய்த்து கெட்டி பதத்தில் வரும்பொழுது ஆமணக்கு விதை சிறிது இடித்து கொதிக்கும் சாரில் கலந்தது விட்டால், பொங்குவது நின்று கெட்டி பதத்தில் இருக்கும் கரைச்சலை கொடங்குச்சியில் ஊற்றி, நன்கு குளிர்ந்த பின் எடுப்பதே கருப்பட்டி ஆகும்.

கருப்பட்டி என்பது பனை மரத்திலிருந்து கிடைக்கும். பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பர்கள் . பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.

கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேலும் மேனி பளபளப்பு பெறும். கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டியுடன் சேர்த்து  சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு  வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நமது உடலுக்கு தேவையான கால்சியம் இதில்  கிடைக்கிறது.

சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்  பெறும்.

காபியில் சர்ச்சரைக்கு பதில் கருப்பட்டியை சேர்த்து குடித்தால், நமது உடலுக்கு சுண்ணாம்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கிறது. மேலும் இதனை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம். வாந்தி , தலை சுற்றல் , பித்தம் நீங்க கருப்பட்டியில் சுக்கு மற்றும் தனியா சேர்த்து உண்டு வந்தால் உடனே குணமடையும் .

கருப்பட்டியில் இத்தனை மருத்துவ குணங்கள் கொண்டுள்ளான. இதில் சுண்ணாம்பு சத்தும் , இரும்பு சத்தும் அதிகம் உள்ளது. சர்கரைக்கு பதிலாக கருப்பட்டியை சேர்த்தால் உண்டால் இரத்ததில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைத்து  காட்டும்.  கருப்பட்டி காப்பி , உளுந்து கழி, உளுந்த கஞ்சி  மற்றும் பலகரங்களில் பயன்படுத்தபடுகிறது.

 

Trending News