இன்றிரவு முதல் இங்கு முழு ஊரடங்கு, என்ன திறந்திருக்கும், என்ன மூடப்படும்!

Maharashtra Curfew: ஊரடங்கு உத்தரவின் போது தேவையான சேவைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 14, 2021, 08:20 AM IST
இன்றிரவு முதல் இங்கு முழு ஊரடங்கு, என்ன திறந்திருக்கும், என்ன மூடப்படும்! title=

மும்பை: மகாராஷ்டிராவில் (Maharashtra Curfew), கொரோனா வைரஸுடனான (Coronavirus) நிலைமை மிகவும் கவலையாக உள்ளது. செவ்வாயன்று, மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று 60,212 (Covid 19) பதிவாகியுள்ளன, 281 பேர் இறந்தனர். இதுபோன்ற சூழ்நிலையில், நிலைமையைக் கருத்தில் கொண்டு, மகாராஷ்டிரா அரசு (Maharashtra) ஏப்ரல் 8 முதல் இரவு 8 மணிக்கு 15 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய்கள் (Coronavirus) அதிகரித்து வருவது கருதில் கொண்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் (Maharashtra) ஆக்ஸிஜனின் தேவையை பூர்த்தி செய்வதற்காக மேற்கு வங்காளத்திலிருந்தோ அல்லது வடகிழக்கு மாநிலங்களிலிருந்தோ ஆக்ஸிஜன் வழங்க இராணுவ விமானங்களை அனுப்புமாறு பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே (Uddhav Thackeray) தெரிவித்தார். ஊரடங்கு (Lockdown) உத்தரவின் போது, ​​அத்தியாவசிய சேவைகள் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் வரை குற்றவியல் நடைமுறைகளின் பிரிவு 144 அமலில் இருக்கும் என்று தாக்கரே கூறினார்.

ALSO READ | LOCKDOWN NEWS: மகாராஷ்டிராவின் மற்றொரு மாவட்டத்தில் முழு ஊரடங்கு

இவை திறந்திருக்கும்
1. ஊரடங்கு உத்தரவின் போது, ​​மருத்துவமனைகள், கிளினிக்குகள், மருத்துவ காப்பீட்டு அலுவலகங்கள், மருத்துவ கடைகள், மருந்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதார சேவைகளும் மாநிலம் முழுவதும் திறக்கப்படும்.
2. செல்லப்பிராணி உணவு கடைகள் திறந்திருக்கும். கால்நடை சேவைகள் திறந்திருக்கும்.
3. பழ-காய்கறி கடைகள், பால்பண்ணைகள், பேக்கரிகள் மற்றும் கேட்டரிங் கடைகள் திறக்கப்படும்.
4. பஸ், ரயில், ஆட்டோ, டாக்சிகள் போன்ற பொது போக்குவரத்து உள்ளிட்ட பிற போக்குவரத்து சேவைகள் தொடரும்.
5. வங்கி தொடர்பான அனைத்து சேவைகளும் தொடரும். வங்கிகள் திறந்திருக்கும்.
6. அத்தியாவசிய சேவைகளுக்கு ஈ-காமர்ஸ் சேவைகள் தொடரும்.
7. மீடியா தொடர்பான சேவைகள் தொடரும்.
8. தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சேவைகள், பெட்ரோல் பம்புகள் மற்றும் சரக்கு சேவை தொடரும்.
9. கட்டுமானத் தொழிலாளர்கள் தளத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
10. வீட்டு விநியோகத்திற்க்கு மட்டும் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு அனுமதி.

இவை மூடப்பட்டிருக்கும்
1. ஊரடங்கு உத்தரவின் போது பிரிவு 144 மாநிலம் முழுவதும் நடைமுறையில் இருக்கும்.
2. தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்படும்.
3. சினிமா அரங்குகள் மற்றும் நாடக அரங்குகள் மூடப்பட்டு இருக்கும்.
4. வீடியோ கேம் பார்லர்கள் மற்றும் கேளிக்கை பூங்காக்கள் மூடப்பட்டிருக்கும்.
5. நீர் பூங்காக்களும் மூடப்பட்டு இருக்கும்.
6. கிளப்புகள், நீச்சல் குளங்கள், ஜிம்கள் மற்றும் விளையாட்டு வளாகங்களும் மூடப்படும்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News