பெற்றோரின் அழுகிய சடலங்களுக்கு நடுவே கிடந்த 4-நாள் சிசு மீட்பு... மனதை உலுக்கும் சம்பவம்!

கடுமையான நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தம்பதிகளுக்கு நடுவே கிடந்த நான்கு நாள் குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 15, 2023, 08:17 PM IST
பெற்றோரின் அழுகிய சடலங்களுக்கு நடுவே கிடந்த  4-நாள் சிசு மீட்பு... மனதை உலுக்கும் சம்பவம்! title=

அனைவர் மனதையும் உலுக்கும் ஒரு நிகழ்வில், டேராடூனில் பெற்றோரின் சடலங்களுக்கு இடையே நான்கு நாட்களே ஆன குழந்தை ஒன்று இவருடன் நீக்கப்பட்டது. இந்த தம்பதிகள் குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாக நிபுணர்கள் கருதுகின்றனர். அவர்கள் உடல் முற்றிலுமாக அழுகி காணப்பட்டது. வீட்டிலிருந்து துர்நாற்றம் பேசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு புகார் அளித்ததன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

டேராடூனில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில், துர்நாற்றம் வீசும் அந்த வீட்டின் உள்ளே போலீசார் பூட்டை உடைத்து நுழைந்தனர். அப்போது அவர்கள் இரு சடலங்களைக் கண்டனர். தம்பதிகளான அவர்கள் உடல்கள் முற்றிலுமாக அழுகி இருந்தது.

சடலங்களின் வாயிலிருந்து ரத்தம் வழிந்து இருந்தது. அவர்கள் உடலை சுற்றியும் ரத்தக்கரை இருந்தது. கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூரைச் சேர்ந்த காஷிப் (25) மற்றும் அவரது மனைவி அனம் (22) ஆகியோர் ஜூன் 8 ஆம் தேதி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தனர். 

பெற்றோரின் உடல்களுக்கு நடுவில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை, உடனடியாக அரசு டூன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு (GDMCH) கொண்டு செல்லப்பட்டது, அங்கு அவர் நீரிழப்பு அதிகம் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். ஆனால் சிகிச்சைக்கு பின் அதன் உடல் நிலை சீராக உள்ளது. நான்கு நாள் குழந்தை எப்படி மூன்று நாட்கள் பட்டினியுடன் உயிருடன் இருந்தது என்பதௌ அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க | 'உத்தமபுத்திரன் பாஜக... எங்களை சீண்டிப் பார்க்காதீர்கள்' முதலமைச்சர் ஸ்டாலினின் எச்சரிக்கை!

GDMCH மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளரான டாக்டர் யூசுப் ரிஸ்வி,  “குழந்தை உடலில் நீரிழப்பு அதிகம் உள்ளது. உடனடியாக திரவங்கள் கொடுக்கப்பட்டது. தற்போது அதன் உடல்நிலை சீராக உள்ளது மற்றும் ஐசியுவில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு காயங்களோ, உடல் உபாதைகளோ இல்லை” என்றார்.

நான்கு மாத சிசுவின் பெற்றோர் சுமார் நான்கு மாதங்களுக்கு முன் டர்னர் சாலையில் உள்ள ஒரு குடியிருப்பை குத்தகைக்கு எடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். தந்தை கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்தார், அவரது மனைவி ஒரு இல்லத்தரசி. இவர்களுக்கு ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. காஷிஃப் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் என்றும், மேலும் அனம் அவரது இரண்டாவது மனைவி என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவருக்கு முதல் திருமணத்தில் ஐந்து வயது மகள் இருந்தாள்.

காஷிப்பின் முதல் மனைவி நுஸ்ரத், கடந்த மூன்று முதல் நான்கு நாட்களாக தனது தொலைபேசி அழைப்புகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை என்று காவல்துறைக்கு தகவல் அளித்தார். ஜூன் 10 அன்று அவர்களின் கடைசி உரையாடலின் போது, காஷிஃப் ரூ. 5 லட்சம் கடனைத் தீர்ப்பதற்காக தனது தந்தைவழி வீட்டிற்கு செல்ல விரும்பும் தனது விருப்பத்தை குறிப்பிட்டார் என முதல் மனைவி மேலும் கூறினார்.

கடுமையான நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தம்பதிகளுக்கு நடுவே கிடந்த நான்கு நாள் குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | அமலாக்கத்துறை வைக்கும் செக்... காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்படும் செந்தில் பாலாஜி!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News