80-வயது பாட்டியை பாலியல் பாலாத்காரம் செய்த கும்பல்!!

புனேவில் 80-வயது பாட்டி ஒருவரை, பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Jan 20, 2018, 04:51 PM IST
80-வயது பாட்டியை பாலியல் பாலாத்காரம் செய்த கும்பல்!!  title=

புனேவில் உள்ள டாலேவாட் பகுதியில், கடந்த ஜனவரி 13-ம் தேதி அன்று கடையில் இருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த 80-வயது நிறைந்த பாட்டி ஒருவரை, கடத்திச் சென்ற கும்பல் வலுக்கட்டாயமாக அவரை கற்பழித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்ற ஒரு சம்பவம் நேற்று முன்தினம், ஹரியானாவில் உள்ள பதேஹாபாத்தின் பூதன் கிராமத்தில் 20 வயது நிறைந்த இளம்பெண் ஒருரை, அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் அவரின் தனிமை நிலை அறிந்த அதே பகுதியை சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக அந்த இளம்பெண்னை கற்பழித்துள்ளனர்.

மேலும்,ஹரியானாவில் உள்ள குருகுராம் மாவட்டத்தில் பாரூக்நகர் பகுதியில், கல்லூரியில் இருந்து வீட்டிற்கு திரும்பிய கல்லூரி மாணவி ஒருவரை கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளது குறிபிடத்தக்கது.

 

Trending News