ஹைதராபாத்தில் CAA ஆதரவாக மார்ச் 15 அமித் ஷா மெகா பேரணி..!

வரும் மார்ச் 15 அன்று ஹைதராபாத்தில் அமித் ஷாவின் தலைமையில் CAA ஆதரவாக மெகா பேரணி நடைபெற உள்ளது!!

Last Updated : Feb 20, 2020, 01:57 PM IST
ஹைதராபாத்தில் CAA ஆதரவாக மார்ச் 15 அமித் ஷா மெகா பேரணி..! title=

வரும் மார்ச் 15 அன்று ஹைதராபாத்தில் அமித் ஷாவின் தலைமையில் CAA ஆதரவாக மெகா பேரணி நடைபெற உள்ளது!!

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் 15 ஆம் தேதி ஹைதராபாத்தில் மெகா பேரணி ஒன்றை நடத்த உள்ளனர். 

அசாதுதீன் ஒவைசியின் நாடாளுமன்றத் தொகுதியான ஹைதராபாத்தில் உள்ள LB.ஸ்டேடியத்தில் பேரணிக்கான ஏற்பாடுகளை பாஜக தொடங்கியுள்ளது. AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி CAA மட்டுமல்ல, NRC மற்றும் NPR ஐயும் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக ஒரு தீர்மானத்தை தெலுங்கானா அமைச்சரவை நிறைவேற்றியதை அடுத்து இந்த பேரணி முக்கியத்துவம் பெறுகிறது. தெலுங்கானா அமைச்சரவை நடவடிக்கையைத் தொடர்ந்து, AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி இந்த முடிவை வரவேற்றார். முன்மொழியப்பட்ட தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் சமூக நலத் திட்டங்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் இது எதிர்காலத்தில் தேசிய குடிமக்களின் பதிவேட்டை (NRC) மேற்கொள்ளப்பட்ட ஒரு பயிற்சியாகும் என்றும் ஓவைசி கூறியிருந்தார்.

AIMIM தலைவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமித் ஷாவுக்கு சர்ச்சைக்குரிய CAA பற்றிய விவாதத்திற்கு சவால் விடுத்திருந்தார். இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு ஒரு பொது விவாதத்திற்கு அமித் ஷா வெளிப்படையான சவாலை எறிந்த பின்னர் ஒவைசியின் கருத்து வந்துள்ளது. 

 

Trending News