மாணவர் சரத்பிரபுவின் உடல் இன்று பிரேத பரிசோதனை!!

டெல்லியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவர் சரத்பிரபுவின் உடல் இன்று  பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.     

Last Updated : Jan 18, 2018, 11:54 AM IST
மாணவர் சரத்பிரபுவின் உடல் இன்று பிரேத பரிசோதனை!! title=

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த தமிழக மாணவர் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி, இவரது மகன் சரத்பிரபு. இவர், கோவை மருத்துவக் கல்லூரியில் MBBS முடித்து பின்னர் டெல்லி AIIMS மருத்துவக் கல்லூரியில் MS பட்டமேற்படிப்பை படித்துவந்தார். முதலாம் ஆண்டு பயின்றுவரும் அவர் நேற்று கல்லூரி விடுதியில் உள்ள கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மர்மமான முறையில் நிகழ்ந்துள்ள இவரது மரணம் குறித்த காரணம் ஏதும் தெரியவில்லை.

டெல்லியில் மாணவர் சரத்பிரபுவின் உடலுக்கு இன்று காலை 12 மணிக்கு பிரேத பரிசோதனை என தகவல் வெளியாகியுள்ளது. இன்று உடற்கூறு ஆய்வு முடிந்ததும் சரத்பிரபு உடல் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், சரத்பிரபுவின் பிரேத பரிசோதனையை மருத்துவர்கள் குழு மேற்கொள்ள வேண்டும் என்று டெல்லி போலீசிடம் சரத்பிரபு தந்தை செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபகாலமாக டெல்லியில் பயிலும் மாணவர்கள் மாயமாவதும், மர்மமான முறையில் இறப்பதும் வாடிக்கையாகி வருகின்றுது. முன்னதாக JNU மாணவர்கள் நஜீப் அகமது மற்றும் முகுல் ஜெயின் மாயமாகினர். இவர்களின் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

இதேப்போல் கடந்த 2016-ஆம் ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரவணனும் மர்மமான முறையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது

Trending News