மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! எதிர்க்கட்சிகள் முடிவு

No confidence Motion: மக்களவையில் நாளை எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 26, 2023, 12:00 AM IST
  • எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம்
  • மணிப்பூர் வன்முறைகளின் எதிரொலி
  • எம்.பி.க்கள் புதன்கிழமை மக்களவையில் ஆஜராக காங்கிரஸ் கொறடா உத்தரவு
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! எதிர்க்கட்சிகள் முடிவு title=

Manipur violence: மணிப்பூர் விவகாரத்தில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சியினர் திட்டமிட்டுள்ளதால், கூட்டணியில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் புதன்கிழமை காலை கலந்தாலோசிக்கப் போவதாக தெரிகிறது.

நம்பிக்கையில்லா தீர்மானம்
 
பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் புதன்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதால், 
காங்கிரஸ் கட்சியின் அனைத்து எம்.பி.க்களுக்கும் புதன்கிழமை லோக்சபாவில் ஆஜராக வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. மணிப்பூரில் நடந்த வன்முறை குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸ் கட்சி அலுவலகத்தில் தயாராக இருப்பதாகவும், காலை 10 மணிக்கு முன்னதாக மக்களவைச் செயலாளர் அலுவலகத்துக்கு வந்து சேரும் என்றும் மக்களவையில் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை காலை 10.30 மணிக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சி அலுவலகத்தில் கூடுவார்கள். மணிப்பூரில் நடந்த வன்முறைகள் குறித்து அரசாங்கத்தையும் பிரதமரையும் பேச வைக்க குழுவின் கடைசி முயற்சியாக இது இருக்கும்.

மேலும் படிக்க | வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ரவுடி வெட்டிப்படுகொலை! 

இல்லாவிட்டால், புதன்கிழமையன்று அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்க விரும்புகின்றன.

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் அறையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் காலை 10 மணிக்கு கூடுகிறார்கள். நாடாளுமன்றத்தில் அவசர விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காகவே இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காக, 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணி, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளிக்கும் என்று முன்னணியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். புதன்கிழமையன்று அவையில் சபாநாயகரால் வாசிக்கப்பட வேண்டும் என்றால், அந்த நோட்டீஸ் காலை 10 மணிக்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | இந்தியாவிலேயே கடன் வாங்கியதில் தமிழ்நாடு முதலிடம் - நாடாளுமன்றத்தில் கூறிய நிர்மலா சீதாராமன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இன்று காலை ஒரு ட்வீட்டில், மணிப்பூரில் 83 நாட்கள் நீடித்த வன்முறைக்கு பிரதமர் பாராளுமன்றத்தில் விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கூறினார். "முழுமையான திகில் கதைகள் இப்போது மெதுவாக வெளிவருகின்றன. மணிப்பூர் வன்முறை குறித்து மோடி அரசாங்கத்திடம் இருந்து இந்தியா பதில்களைக் கோருகிறது," என்று அவர் கூறினார்.

வடகிழக்கு இந்தியாவில் நிலைமை பலவீனமாக உள்ளது என்றும், மணிப்பூர் வன்முறையின் விளைவுகள் மற்ற மாநிலங்களுக்கும் பரவி வருவதாகவும் கார்கே கூறினார்.

"நமது உணர்வுப்பூர்வமான எல்லை மாநிலங்களுக்கு இது நல்லதல்ல. பிரதமர் மோடி தனது ஈகோவை விட்டுவிட்டு, மணிப்பூரில் நிலைமையை சீர் செய்து, நாடுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். நிலைமையை மேம்படுத்த தனது அரசு என்ன செய்கிறது, மணிப்பூரில் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்பதை பிரதமர் மோடி சொல்ல வேண்டும்" என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க | எம்.பிக்களின் நாடாளுமன்ற உள்ளிருப்பு போராட்டம் இரவிலும் தொடர்கிறது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News