குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்கு செக் வைத்த தேர்தல் ஆணையம்

குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் உச்சநீதிமன்ற கொள்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் எச்சரிக்கை....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 12, 2018, 09:59 AM IST
குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்கு செக் வைத்த தேர்தல் ஆணையம் title=

குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் உச்சநீதிமன்ற கொள்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் எச்சரிக்கை....

அரசியலில் குற்றப் பின்னணி உடையவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும், இதனைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கக் கோரியும் தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. கிரிமினல் வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறுவோர் 6 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது என்று தற்போது சட்டம் இருந்தாலும்,  அரசியலில் குற்றப் பின்னணி  உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த சட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

கிரிமினல் வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட உடனோ அல்லது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட உடனோ அந்த நபர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் பட்சத்தில் குற்றப் பின்னணி உடையவர்கள் அரசியலில் நுழைவதைத் தடுக்க முடியும் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. பல்வேறு கட்டங்களாக இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்.பி.க்கள் மற்றும்  எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க அனைத்து  மாநிலங்களிலும் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. 

இதையடுத்து, 'தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் குற்ற பின்னணி குறித்த தகவல்களை விளம்பரம் செய்யவில்லை எனில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் எச்சரித்திருக்கிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 'தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் கண்டிப்பாக, தங்கள் குற்ற பின்னணி விபரங்களை, தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில், குறைந்தபட்சம் மூன்று முறை விளம்பரம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த உத்தரவு, ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் இருந்து அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.

 

Trending News