சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை?

Last Updated : May 26, 2017, 11:06 AM IST
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை? title=

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாக வாய்ப்பு உள்ளது.

இந்த தேர்வு முடிவுகளை cbse.nic.in , cbseresults.nic.in என்ற அதிகாரபூர்வமான இணையதளத்தில் மாணவ-மாணவிகள் தங்கள் பதிவு எண் மற்றும் பள்ளியின் எண் ஆகியவற்றை பூர்த்தி செய்து தங்கள் மதிப்பெண்களை தெரிந்துக்கொள்ளலாம்.

இந்த சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வை சுமார் 11 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதி உள்ளனர். 

முன்னதாக, மத்திய அரசு நடத்தும் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே-24-ம் தேதி வெளியிடப்படும் என  அறிவிக்கப்பட்டிருந்த டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவைத் தொடர்ந்து, தேர்வு முடிவுகள் வெளியிடுவது தள்ளிவைக்கப்பட்டது. 

சிபிஎஸ்இ +2 பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட கடினமான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்கும் வழக்கமான முறையை ரத்துசெய்வதாக சிபிஎஸ்இ இயக்குநரகம் அறிவித்தது. 

இந்நிலையில், கருணை மதிப்பெண் முறையை ரத்துசெய்வதை எதிர்த்து, டெல்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் குழு, சிபிஎஸ்இ-யின் முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இந்தத் திடீர் அறிவிப்பால் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தது. 

இதனால், இந்த ஆண்டில் புதிய ரத்து முடிவுகள் எதையும் அமல்படுத்த வேண்டாம் என ஐகோர்ட் சிபிஎஸ்இக்கு அறிவுறுத்தியது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 'சிபிஎஸ்இ + 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. திட்டமிட்டபடி விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும். தேர்வு முடிவுகள் குறித்த விவகாரத்தில் பெற்றோர்கள், மாணவர்கள் பதற்றப்பட வேண்டாம்' என்றார். 

இந்நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுக்கான முடிவு நாளை ( சனிக்கிழமை) மாலை வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வந்துள்ளது.

Trending News