Aircel-Maxiscase: ஆகஸ்ட் 1 வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை!

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை கைது செய்ய தடை!! 

Last Updated : Jul 25, 2018, 02:06 PM IST
Aircel-Maxiscase: ஆகஸ்ட் 1 வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை!  title=

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை கைது செய்ய தடை!! 

கடந்த 2006 ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு, அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதில் கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு-வை இன்று விசாரணை செய்த டெல்லி உயர்நீதி மன்றம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை அவரை அமலாக்கத்துறை கைது செய்ய இடைகால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை மற்றும் கார்த்தி சிதம்பரத்தை ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி வரை கைது செய்ய நீதிமன்றம் தடைவிதித்திருந்தது குறிப்பிடதக்கது. 

 

Trending News