குஜராத்தில் 2 ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கைது

Last Updated : Feb 26, 2017, 02:14 PM IST
குஜராத்தில் 2 ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கைது title=

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் 2 பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்னர். 

குஜராத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருடன் தொடர்புடையதாக சந்தேகத்தின்படி, இருவரை தீவிரவாத ஒழிப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும், நாட்டில் தீவிரவாத சம்பவங்களை நிகழ்த்த குஜராத்தில் உள்ள வெடிப்பொருள் ஃபேக்டரியில் இருந்து ரசாயன வெடிப்பொருட்களை வாங்க திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராஜ்கோட் மற்றும் பாவ்நகர் பகுதியில் கைது செய்யப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்ட வாசிம், நாத்தின் ஆகியோர் சகோதரர்கள் ஆவர். இவர்கள், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் நடவடிக்கைகள் குறித்த வழக்கில் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது.

இவர்கள் சமூக வலைத்தளங்களின் மூலமாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் பணியமர்த்தப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த மாதம் கேரளாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Trending News