மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவை முன்வைக்கும் அமித்ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்களன்று பாராளுமன்றத்தின் கீழ் சபையில் குடியுரிமை திருத்த மசோதாவை முன்வைப்பார் என தெரிகிறது.

Last Updated : Dec 8, 2019, 06:12 PM IST
மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவை முன்வைக்கும் அமித்ஷா! title=

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்களன்று பாராளுமன்றத்தின் கீழ் சபையில் குடியுரிமை திருத்த மசோதாவை முன்வைப்பார் என தெரிகிறது.

பாக்கிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கான ஏற்பாட்டில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்களன்று பாராளுமன்றத்தின் கீழ் சபையில் குடியுரிமை திருத்த மசோதாவை முன்வைப்பார் என கூறப்படுகிறது.
 
திங்களன்று கீழ் சபையில் நடைபெறவிருக்கும் நிகழ்வுகளின் பட்டியலின் படி, அமித் ஷா பிற்பகல் மசோதாவை முன்வைப்பார், அதில் ஆறு தசாப்தங்களாக நீடித்து வரும் பழமை வாய்ந்த குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட உள்ளது, அதன் பின்னர் அது விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். 

இந்த மசோதா காரணமாக, வடகிழக்கு மாநிலங்களில் சமீப காலமாக பரவலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன, மேலும் ஏராளமான மக்களும் அமைப்புகளும் இந்த மசோதாவை எதிர்க்கின்றன. இது 1985-ஆம் ஆண்டு அசாம் உடன்படிக்கையின் விதிகளை முடிவுக்குக் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. இதில் சட்டவிரோத அகதிகளை மத பாகுபாடு இல்லாமல் திருப்பி அனுப்புவதற்கான கடைசி தேதி மார்ச் 24, 1971-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, செல்வாக்குமிக்க வடகிழக்கு மாணவர் அமைப்பு (NESO) டிசம்பர் 10-ஆம் தேதி இப்பகுதியில் 11 மணி நேர பந்தை அறிவித்துள்ளது. குடியுரிமை திருத்த மசோதா, 2019-இன் படி, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத துன்புறுத்தல் காரணமாக 2014 டிசம்பர் 31-ஆம் தேதி வரை இந்தியா வந்த இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோத அகதிகளாக கருதப்பட மாட்டார்கள் மற்றும் அவர்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்களாகவும் கருதப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News