Income Tax: 5 லட்சம் வரை வருமானம் இருந்தால் வரி விலக்கு! அரசு செய்யவிருக்கும் பெரிய மாற்றம்

Income Tax Slab: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு ஒரு பெரிய பரிசை வழங்க உள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 29, 2022, 04:59 PM IST
  • இந்த முறை வரி முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • இந்த மாற்றத்திற்குப் பிறகு, ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
  • தற்போது உள்ள விதிகளின் படி, ரூ.2.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.
Income Tax: 5 லட்சம் வரை வருமானம் இருந்தால் வரி விலக்கு! அரசு செய்யவிருக்கும் பெரிய மாற்றம் title=

வருமான வரி ஸ்லாப்: வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. நீங்கள் அதிக வருமான வரி செலுத்துவதால் சிரமப்படுகிறீர்கள் என்றால், இப்போது உங்களுக்கு மிக விரைவில் தீர்வு கிடைக்கவுள்ளது. இந்த முறை வரி முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றத்திற்குப் பிறகு, ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு ஒரு பெரிய பரிசை வழங்க உள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்போது வரம்பு 2.5 லட்சமாக உள்ளது

தற்போது உள்ள விதிகளின் படி, ரூ.2.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. இந்த  வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, உங்கள் ஆண்டு வருமானமும் ரூ.5 லட்சம் வரை இருந்தால், நீங்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.

கடைசி மாற்றம் 2014 இல் ஏற்பட்டது

இந்த பட்ஜெட் மத்திய அரசின் இரண்டாவது ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட்டாக இருக்கும். இது நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்படும். இதன்பிறகு, 2024-ம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த ஆண்டு நடுத்தர மக்களுக்கு அரசு பெரிய நிவாரணம் அளிக்கும் என நம்பப்படுகிறது. இதற்கு முன், கடந்த 2014ம் ஆண்டு தனிநபர் வரி விலக்கு வரம்பில் மாற்றம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க | 7th pay Commission டிஏ ஹைக்: இந்த நாளில் வெளியாகும் குட் நியுஸ், ஊதியத்தில் பம்பர் ஏற்றம் 

அருண் ஜெட்லி வரம்பை உயர்த்தினார்

முன்னதாக, இந்த வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்துவதாக அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருந்தார். இந்த நிலையில், இம்முறை இந்த வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 ஆண்டுகள் பழமையான வரி முறை மாறும்

2 ஆண்டுகள் பழமையான வரி முறையில் வரி விலக்கு வரம்பை அதிகரிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும். மேலும், இதன் மூலம் முதலீட்டிற்கும் அதிக பணம் கிடைக்கும்.

மேலும் படிக்க | SSY-PPF திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படலாம்! புத்தாண்டில் நற்செய்தி! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News