பொது சொத்துக்களை பாதுகாப்பது குடி மக்களின் பொறுப்பு.. மோடி!

கடந்த சில வாரங்களாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வன்முறைப் போராட்டங்களின் போது பொது சொத்துக்கள் அழிக்கப்பட்டதை பிரதமர் நரேந்திர மோடி இன்று கண்டித்துள்ளார்!

Last Updated : Dec 25, 2019, 07:02 PM IST
பொது சொத்துக்களை பாதுகாப்பது குடி மக்களின் பொறுப்பு.. மோடி! title=

கடந்த சில வாரங்களாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வன்முறைப் போராட்டங்களின் போது பொது சொத்துக்கள் அழிக்கப்பட்டதை பிரதமர் நரேந்திர மோடி இன்று கண்டித்துள்ளார்!

எதிர்ப்பாளர்கள் தங்கள் நடவடிக்கைகள் "நல்லதா இல்லையா" என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். போராட்டங்களின் போது சேதப்படுத்தப்பட்ட பொது சொத்துகளை பாதுகாப்பது குடிமக்களின் பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லக்னோவில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் வெண்கல சிலை திறப்பு விழா தொடர்ந்து, அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்தின் அடிக்கல்நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி இதுகுறித்து தெரிவிக்கையில்., "உத்தரபிரதேசத்தில் வன்முறையை நாடியவர்களை வீட்டிலேயே உட்கார்ந்து, அவர்கள் செய்தது நல்லதுதானா இல்லையா என்று தங்களைக் கேட்டுக்கொள்ள நான் கேட்க விரும்புகிறேன். எதிர்கால தலைமுறையினருக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் பொது சொத்துக்களை அவர்கள் அழித்துள்ளனர் என்பதை அவர்கள் உணர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அனைவருக்கும் பாதுகாப்பான சூழல் பெறுதல் தொடர்பான உரிமை உண்டு என்பதை மனதில் கொள்ளுமாறு பிரதமர் போராட்டக்காரர்களைக் கேட்டுக்கொண்டார். "பாதுகாப்பான சூழலைப் பெறுவது நம் உரிமை, நமது பாதுகாப்புக்கு பொறுப்பான சட்டம் ஒழுங்கு இயந்திரங்களை மதிக்க வேண்டியது நமது கடமையாகும். சுதந்திரத்திற்குப் பிறகு, நாம் நமது உரிமைகளை மட்டுமே வலியுறுத்தினோம் என்று உத்தரபிரதேசத்தில் வசிக்கும் ஒவ்வொரு மக்களுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன். ஆனால் எங்கள் கடமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே உத்தரபிரதேச காவல்துறையினர் போராட்டத்தின் போது சிறப்பாக செயல்பட்டதாகவும் அவர் பாராட்டினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றிய பின்னர் நாடு முழுவதும் இரத்தம் தோய்ந்த சில மோதல்களை உத்தரபிரதேசமும் கண்டது, இதுவரை மாநிலம் முழுவதும் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டங்களைத் தணிக்க மாநில காவல்துறையினர் ஆபத்தான சக்தியைப் பயன்படுத்துவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, அதிகாரிகள் தற்போது  எதிர்ப்பாளர்களைச் சுட்டுக் கொண்டதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றுத தனது உரையில், பிரதமர் மோடி தனது அரசாங்கம் பல சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை அமைதியான முறையில் எவ்வாறு தீர்த்தது என்பதை மேற்கோள் காட்டியுள்ளார்.

அந்த வகையில் "ராம் ஜன்மபூமி பிரச்சினை அமைதியாக தீர்க்கப்பட்டது எனவும், 370-வது பிரிவு திரும்ப பெற்றபோது நிகழ்ந்த கலவரங்கள் குறித்தும் அவர் நினைவுகூர்ந்தார். 

"நமது உரிமைகள் மற்றும் கடமைகளை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். நல்ல மற்றும் அணுகக்கூடிய கல்வி நமது உரிமை, நமது ஆசிரியர்களை மதிக்க வேண்டும், நமது கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பைப் பாதுகாக்கவும் நமக்கு ஒரு கடமை இருக்கிறது" என்று பிரதமர் மோடி தனது உரையில் மேலும் குறிப்பிட்டார். 

முன்னதாக, பிரதமர் மோடி தனது முன்னோடிகளில் ஒருவரான அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு அவரது 95-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அவர் பேசுகையில்., "அடல்ஜியின் வாழ்க்கையைப் பற்றி பல நல்ல விஷயங்களைச் சொல்ல முடியும் ... எப்போது பேசுவது, எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அது அற்புதமான சக்தி" என்று கூறினார், "அவரது மொனம் அவரது வார்த்தைகளை விட அதிக சக்தியைக் கொண்டிருந்தது" எனவும் மோடி குறிப்பிட்டார்.

Trending News