சந்திராயன்-2 செயற்கைகோளின் முதல் படத்தை வெளியிட்டது ISRO..

இஸ்ரோவின் சந்திராயன் - 2 செயற்கைகோளின் உள்கட்டமைப்பு வடிவத்தின் புகைப்படம் வெளியீடு!!

Last Updated : Jun 12, 2019, 01:18 PM IST
சந்திராயன்-2 செயற்கைகோளின் முதல் படத்தை வெளியிட்டது ISRO.. title=

இஸ்ரோவின் சந்திராயன் - 2 செயற்கைகோளின் உள்கட்டமைப்பு வடிவத்தின் புகைப்படம் வெளியீடு!!

இந்தியா கடந்த 2008 ஆம் ஆண்டு நிலாவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது.  அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்தது. அப்போது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்து படம் எடுத்து அனுப்பியது. இதனால் ரூ.800 கோடி செலவில் அனுப்பப்பட்ட சந்திராயன்-1 திட்டம் வெற்றி பெற்றது.

இதையடுத்து நிலாவை மேலும் ஆராய்ச்சி செய்ய சந்திராயன்-2 விண்கலம் திட்டத்துக்கு இஸ்ரோ முடிவு செய்தது. பல நூறு கோடி ரூபாய் செலவில் சந்திராயன்-2 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தை கடந்த ஆண்டே நிலாவுக்கு அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி செய்தனர்.

ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட்-6ஏ செயற்கை கோளின் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திராயன்-2 விண்கலத்தை ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் சந்திராயன்-2 விண்கலத்தை ஏவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் சந்திராயன்-2 விண்கலத்தில் சில மாற்றங்களை செய்ய விஞ்ஞானிகள் கடைசி நிமிடத்தில் முடிவு செய்ததால் அந்த திட்டமும் நிறைவேறவில்லை. இதனால் 3-வது முறையாக சந்திராயன்-2 விண்கலம் ஏவும் திட்டம் தடைப்பட்டது.

இதை தொடர்ந்து, சந்திராயன்-2 திட்டத்தை வருகிற ஜூலை மாதம் நிறைவேற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஜூலை மாதம் 9-ந்தேதி முதல் 16 ஆந் தேதிக்குள் சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்ட பிறகு முதலில் அது தனது சுற்றுவட்ட பாதையில் சுற்றி வரும். அதன் பிறகு நிலவின் சுற்றுப்பாதைக்கு அந்த விண்கலம் மாறும். அதன் பிறகு நிலவின் மேற்பரப்பில் அந்த விண்கலத்தின் ரோவர் வாகனம் தரை இறக்கப்படும்.

செப்டம்பர் 6 ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக ரோவர் வாகனத்தை நிலாவில் தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். சந்திராயன்-2 விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 நவீன சாதனங்களை கொண்டதாகும். இதில் ஆர்பிட்டர் சாதனம் சந்திராயன்-2 விண்கலத்தை சுற்று பாதை மாற்றுவதற்கு உதவி செய்யும். பெங்களூரு மாரத்தள்ளியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் இறுதி கட்ட பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், இஸ்ரோவின் சந்திராயன் - 2 செயற்கைகோளின் உள்கட்டமைப்பு வடிவம் புகைப்படங்களை வெளியிட்டிள்ளது பெங்களூரு ஆராய்சியாகம். 

 

Trending News