J&K: பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

புல்வாமாவில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்!!

Last Updated : May 16, 2019, 08:09 AM IST
J&K: பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! title=

புல்வாமாவில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மாநில போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் புல்வாமா பகுதியை சுற்றி வளைத்தனர். பாதுகாப்பு படையினரை பார்த்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடங்கினர். 

பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்குமிடையே ஏற்பட்ட பயங்கர துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடைபெற்றுவரும் நிலையில், அங்கு ஊரடங்கு உத்தரவும அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும், தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதுடன், அவன் வசமிருந்த ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

 

Trending News