டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது... அமலாக்கத்துறை அதிரடி - அடுத்தது என்ன?

Delhi CM Arvind Kejriwal Arrest: டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 21, 2024, 09:40 PM IST
  • மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இதற்கு முன் பல தலைவர்கள் கைதாகினர்.
  • திஹார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட உள்ளார்.
  • கடந்த 60 நாட்களில் 2 மாநில முதல்வர்கள் அமலாக்கத்துறையால் கைது
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது... அமலாக்கத்துறை அதிரடி - அடுத்தது என்ன? title=

Delhi CM Arvind Kejriwal Arrest: டெல்லியின் அரசியல் சூழல் தற்போது பரபரப்பாகி வருகிறது. மதுபான கொள்கை முறைக்கேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் இரண்டரை மணிநேரத்திற்கும் மேலாக அவரின் வீட்டில் சோதனை செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் தற்போது கைதுசெய்ய்ப்பட்டார். 

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது நாடு முழுவதும் பலரையும் தலைநகர் நோக்கி திரும்ப வைத்துள்ளது எனலாம். கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்படுகிறார். கடந்த 60 நாள்களில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 2 மாநில முதல்வர்களை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 

9 முறை சம்மன்

டெல்லியில் உள்ள கெஜ்ரிவாலின் வீட்டின் முன் ஆம் ஆத்மி தொண்டர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அவரது வீட்டில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுல்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை முதன்முதலில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் சம்மன் அனுப்பியது. 

மேலும் படிக்க | தேர்தல் பத்திரங்கள் குறித்து ராகுல் காந்தியின் விமர்சனத்தால் கோபமடைந்த அமித் ஷா.. பதிலடி

நவம்பர் 2ஆம் தேதி அவர் அமலாக்கத்துறையின் முன் விசாரணைக்க ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையில், அவர் அப்போது கைதாவார் என கூறப்பட்டது. இதுவரை 9 முறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கடைசியாக, கடந்த திங்கட்கிழமை (மார்ச் 18) விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அதையும் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்தார். 

டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு...

இந்த வழக்கில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முன்னாள் டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 
சமீபத்தில் இந்த வழக்கில் தெலங்கானாவின் மேலவை உறுப்பினரும், முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவின் மகளான கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. 

அந்த வகையில், அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வரும் மக்களவை தேர்தல் வரை மதுபான கொள்கை முறைக்கேடு வழக்கில் தண்டனை நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இருப்பினும், இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருப்பினும், இந்த மனு மீது அமலாக்கத்துறை பதலளிக்கக் கோரி உத்தரவிட்டார்.  

சோதனையும் விசாரணையும்...

இதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையினர் டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் வாரண்ட் உடன் ரெய்டு நடத்தியது. சுமார் 12 அதிகாரிகள் அவர் வீட்டிற்கு வந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அமைச்சர் சௌரப் பரத்வாஜ், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வருகை தந்தார். தற்போது அவரின் வீட்டில் சோதனை நடத்தி வரும் அதிகாரிகள், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரணை மேற்கொண்டனர். 

அங்கிருக்கும் சூழல் குறித்து சௌரப் பரத்வாஜ் தெரிவிக்கையில்,"வீடு முழுவதும் போலீசார் உள்ளனர். உள்ள யாரும் அனுமதிக்கப்படவில்லை. பார்த்தால், சோதனை நடத்தப்பட்டு வருகிறது என தெரிகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய திட்டமிடுகிறார்கள்" என்றார். இதைத் தொடர்ந்து, தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார் என தெரிகிறது. இன்றிரவு அவசர விசாரணை நடத்தப்படும் என கோரிக்கை வைத்த நிலையில், நாளை காலைதான் விசாரணை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | காங்கிரஸ் கட்சியில் இணையும் முக்கியத் தலைவர்கள்... “இந்தி பெல்ட்டில்” மாறும் காட்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News