23 மணி நேரத்திற்கு பிறகு முடிவுக்கு வந்த ம.பி வாக்கு எண்ணிக்கை

மத்திய பிரதேச மாநில வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்தது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 12, 2018, 10:30 AM IST
23 மணி நேரத்திற்கு பிறகு முடிவுக்கு வந்த ம.பி வாக்கு எண்ணிக்கை title=

230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணி முதல் நடைப்பெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல், முடிவுகள் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸுக்கு மாறி மாறி சாதமாகி வருகின்றது. இரு கட்சிகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வந்தது. 

மத்திய பிரதேசத்தில் கடந்த 23 மணிநேரமாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை, தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க மொத்தம் 116 தொகுதிகள் வேண்டும். காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும், பாஜகா 109 இடங்களிலும், பிஎஸ்பி 2 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி ஒரு இடத்திலும், மற்றவர்கள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் இரண்டு இடங்கள் தேவை, இதனால் மற்ற கட்சிகளின் உதவியை நாடுகிறது. குறிப்பாக மாயாவதியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஒருவேளை மாயாவதி ஆதரவு தெரிவித்தால், காங்கிரெஸ் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெரும். 

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

Trending News