மொபைல் போனைத் திருடியதற்காக அந்தரங்க உறுப்பில் இரும்புக் கம்பி நுழைத்த சம்பவம்

ராஜஸ்தானில் மொபைல் போனைத் திருடியதற்காக முஸ்லிம் நபரின் அந்தரங்க பகுதியில் இரும்புக் கம்பியைச் செருகி மிருகத்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 21, 2020, 04:02 PM IST
மொபைல் போனைத் திருடியதற்காக அந்தரங்க உறுப்பில் இரும்புக் கம்பி நுழைத்த சம்பவம் title=

பார்மர்: ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் ஒரு மொபைல் போனை திருடியதற்காக மூன்று பேர் சேர்ந்து 22 வயது முஸ்லிம் நபரை சரமாரியாக தாக்கி, அவரின் அந்தரங்க பகுதியில் இரும்பு கம்பி நுழைத்து மிருகத்தனமாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் ஜனவரி 29 அன்று நடந்தது. ஆனால் சமீபத்தில் ஒரு வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகிய போது, இது வெளிச்சத்திற்கு வந்தது.

நாகூரிலிருந்து (Nagaur) நடந்த கொடூரமான சம்பவம் போல மற்றொரு கொடுமையான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு ஒரு தலித் நபர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்டவரின் சகோதரர் வியாழக்கிழமை மாலை தாமதமாக சென்று பார்மர் கிராமப்புற காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த நபர் தனது புகாரில், தனது சகோதரர் கடத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் தனது சகோதரரின் அந்தரங்க பகுதியில் இரும்புக் கம்பியைச் செருகினார் என்று அவர் குற்றம் சாட்டினார். 

ஜனவரி 29 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக புகார்தாரர் கூறினார். ஆனால் அவரது சகோதரர் இந்த சம்பவத்தை குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளவில்லை. சமீபத்தில் இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது, அதன் பின்னர் அது அவர்களின் கவனத்திற்கு வந்ததை அடுத்து, அவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். 

பார்மர் கிராமப்புற காவல் நிலைய அதிகாரி தீப் சிங், புகாரின் அறிக்கையை உறுதிசெய்து, கடத்தல், சித்திரவதை மற்றும் பாதிக்கப்பட்டவரின் உடலில் இரும்புக் கம்பியைச் செருகுவது போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார். மேலும் பாதிக்கப்பட்டவரின் அறிக்கை இன்னும் பதிவு செய்யப்படவில்லை. அவர் ஊருக்கு வெளியே இருப்பதால் போலீசார் தெரிவித்தனர்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, அந்த நபர் வீடியோவில் குற்றம் சாட்டப்பட்டவரால் தாக்கப்பட்டதைக் காணலாம். ஆனால் பாதிக்கப்பட்டவரின் உடலில் ஒரு இரும்புக் கம்பி செருகப்பட்டதை வீடியோ கிளிப்பில் எங்கும் காண முடிய வில்லை என்றார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை காவலில் வைத்து விசாரித்தோம். பாதிக்கப்பட்டவர் தங்கள் மொபைலை திருடிவிட்டதாகவும், அதனால் அவரை அடித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் மனிதனின் உடலில் இரும்பு கம்பியை செருக வில்லை என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

எதுவாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவரின் அறிக்கைக்காக காத்திருப்பதாக அந்த போலிஸ் அதிகாரி கூறினார். அதன் பின்னர் வழக்கில் விரிவான விசாரணை தொடங்கும், மேலும் ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் போலீசார் கூறினார்

Trending News