கார்ப்பரேட் வரியைக் குறைத்தது வரலாற்று சிறப்பு வாய்ந்தது: பிரதமர் மோடி

நிதியமைச்சரின் அறிவிப்பைப் பாராட்டிய பிரதமர் மோடி, 'கார்ப்பரேட் வரியைக் குறைப்பது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவாகும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 20, 2019, 03:26 PM IST
கார்ப்பரேட் வரியைக் குறைத்தது வரலாற்று சிறப்பு வாய்ந்தது: பிரதமர் மோடி title=

புதுடெல்லி: கார்ப்பரேட் வரியைக் குறைக்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்த முடிவு தொழில்துறை முதல் எல்லா இடங்களிலும் பாராட்டப்பட்டு வருகிறது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பங்குச் சந்தை சாதனை அளவை எட்டியுள்ளது. நிதியமைச்சரின் அறிவிப்பைப் பாராட்டிய பிரதமர் மோடி, 'கார்ப்பரேட் வரியைக் குறைப்பது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவு, இது மேக் இன் இந்தியாவுக்கு (#MakeInIndia) ஊக்கமளிக்கும். இது உலகம் முழுவதிலுமிருந்து தனியார் முதலீட்டைக் கொண்டுவரும் என்றும், அதிக வேலைகள் உருவாக்கப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். 5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதற்கு இது ஒரு சிறந்த நடவடிக்கை என்றும், வணிகத்தை மேம்படுத்துவதற்கு நமது அரசு ஒவ்வொரு சிறந்த நடவடிக்கையை எடுக்கும் என்றும் பிரதமர் தெரிவத்துள்ளார்.

இது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, பெருநிறுவன வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. அது இப்போது மாறியுள்ளது. இது உலகளவில் இந்திய நிறுவனங்களின் அங்கீகாரத்திற்கு வழிவகுக்கும் மற்றும் இந்திய சந்தையில் முதலீட்டாளர்களை ஈர்க்கும். நாட்டை ஒரு பெரிய உற்பத்தி மையமாக மாற்ற மோடி அரசு உறுதிபூண்டுள்ளது.

 

இன்று நடைபெறும் சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கவும், அதே வேளையில் வரியைக் குறைக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த சலுகை உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் புதிய நிறுவனங்களுக்கானது. கார்ப்பரேட் வரி எந்த விலக்குமின்றி 22 சதவீதமாக இருக்கும் என்று நிதியமைச்சர் கூறினார். மேலும், உற்பத்தி நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்படும். இதற்காக, 1.5 லட்சம் கோடி நிவாரண நிதியும் மத்திய அரசு அறிவித்தது.

இது தவிர, நீண்டகால குறைந்தபட்ச மாற்று வரியை (MAT) நிறுவனங்களிடமிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நீக்குவதாக நிதியமைச்சர் நிர்மலா ஒப்புதல் அளித்துள்ளார்.

Trending News