அந்தேரிஅருகே பாலம் இடிந்து விழுந்தது! 2 பேர் காயம்!

அந்தேரி ரயில் நிலையம் அருகே அந்தேரி  கிழக்கு பகுதியையும் மேற்கு பகுதியையும் இணைக்கும் கோகலே பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் தற்போது வரை 2 பேர் காயமடைந்தனர்.

Last Updated : Jul 3, 2018, 09:34 AM IST
அந்தேரிஅருகே பாலம் இடிந்து விழுந்தது! 2 பேர் காயம்! title=

அந்தேரி ரயில் நிலையம் அருகே அந்தேரி  கிழக்கு பகுதியையும் மேற்கு பகுதியையும் இணைக்கும் கோகலே பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் தற்போது வரை 2 பேர் காயமடைந்தனர்.

 

 

 

மும்பையில் இன்று காலை முதல் கானமழை பெய்து வருகிறது. இதனால் கோகலே பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தின் காரணத்தால் போக்குவரத்து கடும் பாதிப்படைந்துள்ளது. இடிபாடுகளை சரி செய்ய மும்பை தீயணைப்பு வீரர்களை ஈடுபட்டு வருகின்றனர். 

இடிந்து விழுந்து இந்த பாலமானது ஆந்தேரி மேற்கு மற்றும் ஆந்தேரி கிழக்கை இணைக்கிறது. சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்ததாக முதற்கட்ட தகவல் ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தின் காரணத்தால் மேற்குப் பாதையில் ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விபத்து ஏற்ப்பட்டுயுள்ள இடத்திற்கு பிஎம்சி, தீயணைப்பு வாகனங்கள், ரயில்வே போலீஸ் படை விரைந்தனர்.

 

 

Trending News