அனைத்து வழக்குகளிலும் கைது நடவடிக்கை என்பது கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு

காவல்துறை கைது செய்யும் நடவடிக்கை என்பது சாதரணமாகவும், சம்பிரதாயமானதாகவும் அவை இருந்தாலும்  கைது செய்யப்படுபவரின் கவுரவத்திற்கும், தன்மானத்திற்கும் மிகப் பெரிய இழுக்காக அது அமைந்துவிடும்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 24, 2021, 12:50 PM IST
அனைத்து வழக்குகளிலும் கைது நடவடிக்கை என்பது கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு title=

"உச்சநீதிமன்றம் (Supreme court) ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது! அதில் காவல் நிலையத்தில் பதியப்படுகின்ற அனைத்து வழக்குகளிலும் கைது நடவடிக்கை என்பது கட்டாயமில்லை! எனவும் அந்தந்த வழக்கிற்கு ஏற்றவாறு கைது நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது.

அதில் குற்ற வழக்குகளில் ஈடுபடுபவர்களை காவல் துறையினர் கைது செய்வது ஒன்றிய, மாநில காவல்துறையின் சட்டரீதியான நடவடிக்கையாகும். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பொதுநல மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் "சாதரணமாக விசாரிக்க கூடிய வழக்குகளை கூட காவல் துறையினர் பொது இடங்களில் வைத்து கைது நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். இது கைது செய்யப்படுவோர் பின்னர் குற்ற செயலில் ஈடுபடவில்லை என்று தெரிய வந்தால் தவறாக கைது செய்யப்பட்டவருக்கு மனக்கஷ்டத்தை கொடுக்கும் என்பதால் இது குறித்து உச்சநீதிமன்றம் (Supreme Court) உரிய விசாரணை நடத்தி இதற்கொரு தீர்வு காண வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ALSO READ | Finance Ministry: என்று முடிவுக்கு வரும் வருமான வரித்துறை இணையதளக் கோளாறு Infosys?

இந்த வழக்கின் விசாரணையை கையிலெடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கப்பட்ட உத்தரவில்:  காவல்துறை கைது செய்யும் நடவடிக்கை என்பது சாதரணமாகவும், சம்பிரதாயமானதாகவும் அவை இருந்தாலும்  கைது செய்யப்படுபவரின் கவுரவத்திற்கும், தன்மானத்திற்கும் மிகப் பெரிய இழுக்காக அது அமைந்துவிடும்.

"சட்டம் கைது செய்வதற்கு அனுமதி அளித்திருந்தாலும் அந்த அதிகாரத்தை எக்காரணம் கொண்டும் "காவல்துறையினர் தன்னிச்சையாக செயல்படுத்தக் கூடாது. இருப்பினும் கொடிய குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய குற்றவாளிகள் தப்பித்துச் செல்வதற்கு வாய்ப்புகள் இருக்கும் போது காவல்துறையினர் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

"இந்த உத்தரவை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளில் இருக்கக் கூடிய காவல்துறையினர் கருத்தில் கொண்டு வரக்கூடிய காலகட்டங்களில் வழக்கிற்கு ஏற்றவாறு அவர்கள் செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

ALSO READ  | Income Tax Return: வருமான வரி தாக்கல் செய்கையில் ஏற்படும் பொதுவான தவறுகள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News