கொடூரம்... 7 அடி குழியில் கணவனை புதைத்த மனைவி - 4 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு

உத்தரப் பிரதேசத்தில் பெண் ஒருவர் காதலருடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, 7 அடி குழியில் புதைத்துள்ளார். இதனை 4 ஆண்டுகள் கழித்து போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 15, 2022, 08:37 AM IST
  • கொலை செய்தவற்கு நீண்ட காலத்திற்கு முன்பே கணவனுக்கு 7 அடியில் குழி தோண்டி வைத்தள்ளார்.
  • 4 ஆண்டுகள் கழித்து போலீசாருக்கு துப்பு கிடைத்துள்ளது.
கொடூரம்... 7 அடி குழியில் கணவனை புதைத்த மனைவி - 4 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு title=

டெல்லியில் 26 வயது ஷ்ரத்தா என்ற பெண்ணை, அவரின் காதலன் அப்தாப் அமீன் என்பவர் கொடூரமாக கொன்ற சம்பவம் நேற்று நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த பெண்ணை கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டி, அதை 18 நாள்கள் தினமும் ஒவ்வொரு துண்டையும் கொண்டு நகரின் வெவ்வேறு பகுதிகளில் புதைத்துவைத்துள்ளார். வீசி வந்துள்ளார், அமீன். இதை வெளிநாட்டு தொடர்களை பார்த்து, தெரிந்துகொண்டு அதேபோன்று செய்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இந்த சம்பவம் ஓய்வதற்குள், அடுத்து உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரில் மற்றொரு கொடூர கொலை ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், காசியாபாத்தை சேர்ந்த சவிதா என்ற பெண், தனது கணவர் சந்திரவீர் என்பவரை காணவில்லை என போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், தனது கணவரின் இளைய சகோதரனின் மீது சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்த வகையில், நான்கு வருடங்களுக்கு பின் அந்த கொலை குறித்த துப்பு போலீசாருக்கு கிடைத்துள்ளது. 

மேலும் படிக்க | காதலியை கொன்று 35 துண்டுகளாக வெட்டி புதைத்த காதலன்! தில்லியில் நடந்த கொடூரம்!

இதையடுத்து, குற்றப்பிரிவு போலீசார் கூடுதல் தகவலுக்காக சவிதா - சந்திரவீரின் சிறு வயது மகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவரின் மகள்,'எங்கள் வீட்டிற்கு பக்கத்துவீட்டு மாமாதான் அடிக்கடி வருவார்' என கூறியுள்ளது. அப்போதுதான், போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சவிதாவின் பக்கத்துவீட்டுக்காரர் அருண் என்பவரும் வந்துள்ளார். 

அவரிடம் விசாரணை செய்ததில், சவிதாவும் அருணும் 2017ஆம் ஆண்டில் இருந்து திருமணத்தை தாண்டிய உறவில் இருந்து வருவது தெரியவந்தது. அருண் - சவிதா விவகாரம் அவருடைய கணவருக்கு தெரிந்துள்ளது. இதனால், சவிதாவின் கணவர், சவிதாவை கடுமையாக தாக்கியுள்ளார். 

இந்த சூழலில், சவீதாவின் காதலர் அருண், சந்திரவீர் தலையில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து, கோடாறியால் அவரின் கையை வெட்டி, காட்டுப்பகுதியில் புதைத்துள்ளார். மேலும், சந்திரவீரை கொலைச்செய்வதற்கு முன்னரே, சவிதா - அருண்  ஆகியோர் 7 அடிக்கு குழியை தோண்டி வைத்துள்ளனர். 

அந்த குழியில், சந்திரவீரின் உடலை புதைத்து, அதனை சிமெண்டை நிரப்பி பூசியுள்ளனர். இதனை, சுமார் 4 ஆண்டுகளுக்கு பின் போலீசார் நேற்று கண்டறிந்தனர். மேலும், தோண்டி எடுக்கப்பட்ட உடலை உடற்கூராய்வு மேற்கொள்வதற்கும், டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்கும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து, அருண், சவிதா ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்கள் சந்திரவீரை கொலை செய்ய பயன்படுத்திய கோடாறி, கைத்துப்பாக்கி ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். 

மேலும் படிக்க | சென்னையில் பாஸ்ட்புட் சாப்பிட்ட மாணவர் உயிரிழப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News