திருவனந்தபுரத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராஜேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் சனிக்கிழமை திருவனந்தபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு இரவு 8.30 மணிக்கு வீட்டிற்கு திரும்பி சென்றார். அவர் வீட்டிற்கு செல்லும் வழியில் 6 பேர் கொண்ட கும்பல் அவரை ஆயுதங்களால் தாக்கியது.
அந்த கும்பல் ராஜேஷின் இடது கையை வெட்டிவிட்டு தப்பியோடியது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ராஜேஷை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அங்கு அவர் பலியானார்.
இந்த சம்பவத்திற்கு சிபிஎம் ஆட்கள் தான் காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ராஜேஷின் கொலை சம்பவத்தை கண்டித்து கேரளாவில் இன்று முழுஅடைப்புக்கு பாஜக அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.