எச்சரிக்கை! பொது இடங்களில் எச்சில் துப்பினால் 1000 ரூபாய் வரையில் அபராதம்...

நொய்டாவில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் 1000 ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Last Updated : May 5, 2020, 03:41 PM IST
எச்சரிக்கை! பொது இடங்களில் எச்சில் துப்பினால் 1000 ரூபாய் வரையில் அபராதம்... title=

நொய்டாவில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் 1000 ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் பொது இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் விதமாக உமிழ்நீர், குட்கா அல்லது புகையிலை துப்புவது தடைசெய்யப்பட்டுள்ளது. மற்றும் இந்த தடையை மீறுபவர்களுக்கு முதல் முறையாக ரூ.500 அபராதம் விதிக்கப்படும் மற்றும் அடுத்த முறைக்கு ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் -19 வெடிப்புக்கு மத்தியில் பொது இடங்களில் துப்புவதை தடை செய்ய உத்தரபிரதேச அரசு இதேபோன்ற உத்தரவை பிறப்பித்த ஒரு நாள் கழித்து நொய்டா ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
"COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், பொது இடங்களில் குட்கா அல்லது புகையிலை துப்புவது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் முதல் முறையாக குற்றவாளிகளுக்கு ரூ.500-யும், அடத்த கட்டத்தில் ரூ.1,000-யும் அபராதமாக விதிக்கப்படும்" என்று நொய்டா ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரிது மகேஸ்வரி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவெளியில் துப்பப்படும் எச்சில்களில் காணப்படும் சில கிருமிகள் 24 மணிநேரம் வரை உயிர்வாழ முடியும் என்றும், இந்த உமிழ்நீர் காரணமாக எந்தவொரு நபரும் நோய்வாய் படலாம் என்றும் அதிகாரிகள் தங்கள் அறிவிப்பின் மூலம் எச்சரித்துள்ளனர்.

வைரஸைத் தவிர, இத்தகைய கிருமிகள் இன்ஃப்ளூயன்ஸா, காசநோய், ஹெபடைடிஸ், நிமோனியா போன்ற தொற்றுநோய்களையும் ஏற்படுத்தக்கூடும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நொய்டா ஆணையத்தின் சுமார் மூன்று டஜன் அதிகாரிகள், சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட, குற்றவாளிகளுக்கு சல்லான்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. "இந்த உத்தரவு திரும்பப் பெறுவதற்கான தெளிவான வழிமுறைகள் வரும் வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்" என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளனர்.

டெல்லியை ஒட்டியுள்ள நொய்டா மேற்கு உ.பி.யில் உள்ள கௌதம் புத்த நகர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும், இங்கு இதுவரை 179 நேர்மறையான கொரோனா வைரஸ்கள் பதிவாகியுள்ளது மற்றும் 'சிவப்பு மண்டல' பட்டியலில் இடம்பிடித்துள்ளது என அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News