போர் ஏற்பட்டால் எந்த ஒரு எல்லைக்கும் செல்ல பாகிஸ்தான் தயங்காது: இம்ரான்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் எந்த ஒரு எல்லைக்கும் செல்ல பாகிஸ்தான் தயங்காது என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை!!

Last Updated : Aug 27, 2019, 10:18 AM IST
போர் ஏற்பட்டால் எந்த ஒரு எல்லைக்கும் செல்ல பாகிஸ்தான் தயங்காது: இம்ரான்!  title=

இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் எந்த ஒரு எல்லைக்கும் செல்ல பாகிஸ்தான் தயங்காது என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை!!

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான முரண்பாடுகள் போரை நோக்கி சென்றால் இருநாடுகளும் அணு ஆயுத நாடுகள் என்பதை உலக நாடுகள் உணர வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

உலக நாடுகளின் ஆதரவு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பாகிஸ்தான் எந்த ஒரு எல்லைக்கும் போகத்தயாராக இருப்பதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார். அணு ஆயுதப்போர் நிகழ்ந்தால் வென்றவர் தோற்றவர் யாரும் இருக்கமாட்டார்கள் என்று கூறிய இம்ரான் கான் உலக நாடுகளுக்கு இத்தகைய போரை தடுப்பதற்கான மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 27 ஆம் தேதி ஐநா.பொதுக்குழுக்கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை உலக நாடுகள் முன் எழுப்பி தாம் உரை நிகழ்த்த இருப்பதாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். உலக அரங்கில் தொடர்ந்து காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் விவாதித்து வருவதாகவும் 1965 ஆம் ஆடுக்கு பிறகு முதன்முறையாக ஐ.நா.சபை காஷ்மீருக்காக கூட்டத்தை கூட்டியது என்றும் சர்வதேச ஊடகங்களில் இது மிகப்பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் ஷாநவாஸ் ஹூசேன், பாகிஸ்தான் கடந்த காலம் நடத்திய போர்களில் இந்தியாவின் காலடியில் விழுந்து மண்டியிட்டதை நினைத்துப் பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி பாகிஸ்தானின் எல்லாவிதமான நோய்களுக்கும் சிகிச்சையளிப்பார் என்று குறிப்பிட்டுள்ள அவர், அமெரிக்காவுடன் இந்தியா சம அளவில் இருப்பதாகவும் பாகிஸ்தான் அமெரிக்காவிடம் பிச்சை எடுக்கும் நாடாக இருப்பதாகவும் சாடினார்.

 

Trending News