#INX affair: ப.சிதம்பரத்தை கைது செய்ய ஜூலை 3 வரை தடை! உயர்நீதிமன்றம்!!

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஜூலை 3ஆம் தேதி வரை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.  

Last Updated : May 31, 2018, 12:33 PM IST
#INX affair: ப.சிதம்பரத்தை கைது செய்ய ஜூலை 3 வரை தடை! உயர்நீதிமன்றம்!! title=

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

ஜூலை 3ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்யவும் டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.ப.சிதம்பரம் இன்று ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள நிலையில் அவர் மீது கைது நடவடிக்கை பாயாமல் இருக்கும் வகையில் டெல்லி  உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு அளித்ததையடுத்து அவரை கைது செய்ய வரும் ஜூன் 5 தேதி வரை தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரித்து வருகின்றன. இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டதாகவும் இதன்மூலம் அவரும் அவரது நிறுவனமும் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ப.சிதம்பரமும் சேர்க்கப்பட்டுள்ளார்

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 5ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய பாட்டியலா நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News