கருப்பு கொடி!! கருப்பு சட்டையுடன் இருக்கும் கருணாநிதி புகைப்படம்!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கருப்பு கொடியுடன் கூடிய கருப்பு சட்டை அணிந்துள்ளார்.   

Last Updated : Apr 12, 2018, 01:47 PM IST
கருப்பு கொடி!! கருப்பு சட்டையுடன் இருக்கும் கருணாநிதி புகைப்படம்!!  title=

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும், தி.மு.க தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன. அதன்படி சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்பட்டது. 

இந்நிலையில், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் மற்றும் தோழமை கட்சியை சேர்ந்தவர்களும் கருப்பு சட்டை அணிந்து கிண்டி போலீஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது 2 ஆயிரம் கருப்பு பலூன்களையும், ராட்சத பலூன்களையும் வானில் பறக்க விடப்பட்டனர்.

இதையடுத்து, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோல் சென்னை, திருச்சி, திருவெறும்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், நாகை, திருவாரூரில் உள்ள வீடுகள், பேருந்து நிலையம், அலுவலகங்களில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கருப்பு கொடியுடன் கூடிய கருப்பு சட்டை அணிந்துள்ளார்.  

Trending News