மண்ணை சாப்பிட்டு 100-வயதை கடந்த மாமனிதர்!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறு வயதிலிருந்தே மண்ணை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் 100 வயதுடைய தாத்தா. 

Last Updated : Jan 19, 2018, 02:57 PM IST
மண்ணை சாப்பிட்டு 100-வயதை கடந்த மாமனிதர்!! title=

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறு வயதிலிருந்தே மண்ணை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் 100 வயதுடைய தாத்தா.

ஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ் மாவட்டத்தில் வசிக்கும் கரு பஸ்வான் என்கிற 100 வயது தாத்தா உணவு உண்ணாமல் வெறும் மண்ணை மட்டும் உண்டு உயிர் வாழ்ந்து வருகிறார். 

இது குறித்து அவர் கூறுகையில், குடும்ப வறுமை காரணமாக நான் 11 வயதில் இருந்தே மண்ணை சாப்பிட ஆரம்பித்தேன். பின்னர் இது ஒரு தினசரி பழக்கமாகவே ஆகிவிட்டது என்றார்.

இந்த செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

Trending News