இன்னமும் ITR தாக்கல் செய்யவில்லையா? கவலை வேண்டாம்... இல்லை அபராதம்: அரசு அளித்த பரிசு!!

Income Tax Return: ஜூலை 31 -க்குப் பிறகு ஐடிஆர் தாக்கல் செய்வதற்கும் அபராதம் செலுத்த வேண்டியதில்லை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 4, 2023, 09:02 PM IST
  • ஜூலை 31 -க்குப் பிறகு ஐடிஆர் தாக்கல் செய்வதற்கும் அபராதம் செலுத்த வேண்டியதில்லை.
  • இது குறித்து தற்போது வருமான வரித்துறை ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
  • யாரெல்லாம் அபராதம் செலுத்த வேண்டியதில்லை?
இன்னமும் ITR தாக்கல் செய்யவில்லையா? கவலை வேண்டாம்... இல்லை அபராதம்: அரசு அளித்த பரிசு!!  title=

வருமான வரி புதுப்பிப்பு: வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. அரசு தரப்பிலிருந்து ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2023 என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த தேதிக்குப் பிறகு டிசம்பர் 31 வரை வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்கள் ரூ. 5000 அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் இப்போது உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ஜூலை 31 -க்குப் பிறகு ஐடிஆர் தாக்கல் செய்வதற்கும் அபராதம் செலுத்த வேண்டியதில்லை. இது குறித்து தற்போது வருமான வரித்துறை ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
 
அபராதம் செலுத்த வேண்டியதில்லை

பல மாநிலங்களில் வெள்ளம் காரணமாக, மக்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்ய முடியவில்லை. வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்க பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், அரசாங்கத்தால் தேதி நீட்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு அபராதம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
 
தாமதக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை

ஏதோ காரணத்தால் நீங்கள் இன்னும் ஐடிஆர் தாக்கல் செய்யாமல், இனி வரும் நாட்களில் அபராதத்துடன் பிலேடெட் ஐடிஆர் -ஐ தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தால், அதற்கு முன் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளுங்கள். வருமான வரிச் சட்டத்தின் விதிகளின்படி, காலக்கெடு முடிந்த பிறகு ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு அனைவரும் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
 
மேலும் படிக்க | இன்கம் டாக்ஸ் கட்டியவர்களுக்கு ரீபண்ட் வராது! மத்திய நிதியமைச்சர் அதிர்ச்சித் தகவல்

யாரெல்லாம் அபராதம் செலுத்த வேண்டியதில்லை?

ஒரு நபரின் மொத்த வருமானம் அடிப்படை விலக்கு வரம்பை மீறவில்லை என்றால், தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்யும் போது அவர் அபராதம் செலுத்த வேண்டியதில்லை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த விலக்கு வருமான வரிச் சட்டத்தின் 234F பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
5 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும்

வருமான வரியின் புதிய வரி விதிப்பின் கீழ், நீங்கள் பெறும் தனிப்பட்ட அடிப்படை விலக்கு ரூ. 3 லட்சம் ஆகும். அதே சமயம், பழைய வரி விதிப்பில், அடிப்படை விலக்கு வரம்பு வயதுக்கு ஏற்ப மாறுபடலாம். இதில், 60 வயது வரை உள்ளவர்களுக்கு ரூ. 2.5 லட்சமும், 60 முதல் 80 வயது வரை உள்ளவர்களுக்கு ரூ. 3 லட்சம் வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

கூடுதல் தகவல்

வருமான வரித்துறையிடம் இருந்து கிடைத்த தகவலின்படி, நீங்கள் வருமான வரி கட்டிவிட்டு, அதற்கான ரீஃபண்ட் தாக்கல் செய்துவிட்டு, இதுவரை பணத்தை திரும்பப் பெறவில்லை என்றால், உங்களது ரீபண்ட் பணத்தை அரசே நிறுத்தி வைத்துள்ளது.

ஏன் பணத்தைத் திரும்பப் பெறவில்லை?

2022-23 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு அரசாங்கம் ரீபண்ட் பணத்தை வழங்கத் தொடங்கியுள்ளது என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம், ஆனால் இந்த முறை சரிபார்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே பணம் திரும்பப் பெறப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. . நீங்கள் ITR சரிபார்ப்பைச் செய்யவில்லை என்றால், இந்த முறை அரசாங்கத்திடமிருந்து பணத்தைத் திரும்பப் பெற முடியாது.

மேலும் படிக்க | தவறான ஆதாருடன் பான் கார்டு இணைக்கப்பட்டதா? எப்படி சரி செய்வது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News