உங்கள் தொழில் செழிப்படைய வேண்டும் என்றால் இந்த 5 ஜோதிட பரிகாரங்களை செய்யுங்கள்

ஜோதிட பரிகாரம் மேற்கொள்வதன் மூலம் சொந்த வியாபாரத்தில் வெற்றியை அடைய உதவுகிறது. மீண்டும், அந்த நபர் ஞானம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியுடன் ஆசீர்வதிக்கப்படுகிறார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 4, 2021, 10:03 PM IST
உங்கள் தொழில் செழிப்படைய வேண்டும் என்றால் இந்த 5 ஜோதிட பரிகாரங்களை செய்யுங்கள்  title=

நாம் அனைவரும் நமது வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளவும் நமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஏதாவது ஒரு வேலையை செய்கிறோம். சிலர் வேலைக்கு செல்கிறார்கள் மற்றும் தங்கள் வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்தை அடைகிறார்கள். அதே நேரத்தில், சிலர் சுயதொழில் செய்கிறார்கள், சிலர் பிசினஸ் செய்ய விரும்புகிறார்கள். வேலைக்கு செல்பவர், மாத இறுதியில் அவருக்கு சம்பளம் கிடைப்பது உறுதி. அவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கவும் மற்றும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஒவ்வொரு மாதமும் கடைசி தேதியை எதிர்பார்க்கிறார்கள். 

ஆனால் வணிகம் அல்லது சுயத்தொழிலில் ஈடுபடுபவர்கள், தொழில் ஆரம்பிக்கும் போது, குறிப்பிட்ட முதலீடுகளுடன் கடினமாக உழைக்க வேண்டும். அவர்கள் தங்கள் வணிக வருமானத்தை முறைப்படுத்த கூடுதலாக உழைக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் தங்களுக்கு சம்பாதிப்பது மட்டுமல்லாமல், தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் மற்றும் நிறுவனத்துக்கு தேவையான தொகையை எடுக்க வேண்டும். ஒரு தொழிலதிபருக்கு எப்போதும் பல முக்கிய பொறுப்புக்கள் இருக்கும். 

சந்தேகத்திற்கு இடமின்றி, அவர்கள் அனைத்து முடிவுகளையும் சந்திக்க மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். நிச்சயமாக, அவர்களின் கடின உழைப்பை மாற்ற முடியாது. அவர்களின் முழுமையான அர்ப்பணிப்பும் கவனமும் தான் வெற்றியை அடைய உதவுகிறது. இருப்பினும், போட்டி உலகில், இது போதுமா? கடின உழைப்பு மட்டுமே பணம் சேர்க்க உதவுமா? ஒரு சின்ன குறைபாடுகள் இருந்தாலும், வணிகத்திற்கு பெரும் இழப்பு ஏற்படலாம் அல்லது வணிகப் பரிவர்த்தனைகள் மூலம் கிடைக்கும் லாபம் குறையலாம். நமது வெற்றி தள்ளிப்போகவோ மற்றும் தாமதப்படுத்த பல நிச்சயமற்ற நிலைகள் உள்ளன. இங்குதான் ஜோதிட பரிகாரங்கள் உங்களுக்கு உதவுகிறது.

ஜோதிட பரிகாரம் மேற்கொள்வதன் மூலம் சொந்த வியாபாரத்தில் வெற்றியை அடைய உதவுகிறது. மீண்டும், அந்த நபர் ஞானம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியுடன் ஆசீர்வதிக்கப்படுகிறார். ஒரு வியாபாரம் சமநிலையை அடைந்தால் மட்டுமே அவை லாபகரமாக மாறும்.

* வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க உங்களுக்கு தடுங்கள் இருந்தால், சனிக்கிழமைதோறும் சனி பகவான் சன்னதியில் தீபம் ஏற்றி எண்ணெய் நெய்வேத்தியம் படைத்து வணங்குவது நல்லது. மேலும் உளுந்து தானிய தானம் அளிக்க வேண்டும். இது சனி பகவானை மகிழ்ச்சி அடையச் செய்யும். சனி பகவான் உங்கள் நற்செயல்களுக்கு கணக்கு வைத்து அதை வட்டியுடன் திருப்பித் தரும். 

* மிளகு மற்றும் உளுந்து இரண்டையும் கலந்து உங்கள் கையில் முஷ்டி அளவு எடுத்து உங்கள் வணிக வளாகத்தின் தரையில் அனைத்து பக்கங்களிலும் வீச வேண்டும். அதன் பிறகு அதைத் துடைக்கவும். துடைத்த கழிவுகளை சேகரித்து தனிமையான இடத்தில் புதைக்கவும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இதைச் செய்ய வேண்டும். 

* காயத்ரி மந்திரத்தை, 108 முறை, சூரியனை நோக்கி, தினமும் ஜபம் செய்யுங்கள். அவரை மகிழ்விக்க சுத்தமான தண்ணீர் மற்றும் வெல்லம் வழங்குங்கள். இது உங்கள் வியாபாரத்தை மேம்படுத்துவதோடு செழிப்பையும் அதிகரிக்கும்.

* உங்கள் வியாபாரத்திற்கு பொருட்களை வாங்கும்போது சிறிய பொம்மைகளை வாங்க வரவும். ஏழை குழந்தைகளுக்கு இந்த பொம்மைகளை கொடுக்கலாம். அவர்களின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சி உங்கள் வியாபாரத்திற்கு செழிப்பைத் தரும்.

* ஒரு ஆலமரம் இலையை எடுத்து நீங்கள் அமரும் இருக்கைக்கு அடியில் வைக்கவும். இது ஒரு சனிக்கிழமைகளில் மட்டுமே செய்யப்பட வேண்டும். ஏழு சனிக்கிழமைகளில் தொடர்ந்து அவற்றை செய்யவும். அந்த இலைகளை அனைத்தையும் சேகரிக்கவும். சேகரித்தவுடன், அவை ஆற்றில் அல்லது சுத்தமான ஓடும் நீரில் போட வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News